Tuesday, December 6, 2011

டிசம்பர் மாதச் சித்திரங்கள்

First Published : 05 Dec 2011 02:59:17 AM IST


வெளியூர் சென்று திரும்பிய பாரதியார் இருண்ட அறையில் கிழிந்த பாயில் சோர்வாய் படுத்திருந்த நீலகண்ட பிரம்மச்சாரியாரைக் கலக்கத்துடன் பார்க்கிறார். அவர் மெதுவாய் எழுந்து சென்று மண்பானையில் இருந்த தண்ணீரைக் குவளையில் அள்ளிப்பருகிவிட்டு மீண்டும் வந்து பாயில் படுக்கிறார்.அதைக்கண்ட பாரதி, ""என்ன பிரம்மச்சாரியாரே, உடல் நலம் சரியில்லையா?'' என்று கவலையுடன் கேட்கிறார். அமைதியாய் இருந்தவரை, பாரதி மீண்டும் மீண்டும் வினவவே, அவர் கூறுகிறார் ""என்ன செய்ய? சாப்பிட்டு நான்கு நாளாகின்றன. தண்ணீரை மட்டும்தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்...'' என்று சொன்னாராம்.நெல்லை மாவட்டத்தில் சுதந்திரக் கனலைப் பற்ற வைத்த வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் சேர்ந்து போராடிய ஆவேசத்துடன் முழங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியார் பட்டினியில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்காத அந்த முண்டாசுக்கவிஞன் அந்த நேரத்தில்தான் எழுதுகிறான்:"தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்ஜகத்தினை அழித்திடுவோம்'என்று. அப்பேர்ப்பட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் பிறந்த நாள் டிசம்பர் 2.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த ஒரு படக்கண்காட்சி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களோடு இருந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரனுமான ச. தமிழ்ச்செல்வன், மீசை முளைக்காத ஓர் இளைஞரின் படத்தைக் காண்பித்து, ""இந்த இளைஞரைத் தெரியுமா?'' என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்களுக்குத் தெரியவில்லை. அவர் கூறினார்.""இவர் பெயர் குதிராம் போஸ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகரமான இளைஞர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கிய வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட்டைக் கொலை செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 15. பிரிட்டிஷ் அரசு அவரைத் தூக்கில் போட முடிவு செய்தது. மேற்கு வங்க மக்கள் கொந்தளித்தனர்.குதிராம் போஸின் தாய் கதறினார். ""என் பச்சிளம்பாலகனை விட்டு விடுங்கள்'' என்று அரற்றினார்.குதிராம் போஸ் மனம் கலங்கவில்லை. தூக்கிலிடுவதற்கு முதல்நாள் இரவு, சிறைச்சாலையின் சுவற்றில் கரித்துண்டால் அவரது அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதினான்:""அழாதே அம்மா!நான் மீண்டும் பிறப்பேன்சித்தியின் வயிற்றில் மகனாக..பிறந்ததுநான்தான் என்ப தறியகுழந்தையின்கழுத்தைப்பார்அதில் -தூக்குக்கயிற்றின்தழும்பு இருக்கும்!அழாதே அம்மா!'' அந்த நேரத்தில் அவரது சித்திக்கு பிரசவ நேரம். அதனால் அவர் அப்படி எழுதிவிட்டு தூக்குமேடை ஏறினார். அதன்பிறகு மேற்கு வங்க மக்கள் குதிராம் போஸ் எழுதிய கவிதை வரிகளை சிறைச்சாலைச் சுவற்றில் தங்கள் கைகளால் தடவிப்பார்த்து ஆவேசமடைந்தார்கள். கிராமப்புறப் பாடல்களில் குதிராம் போஸின் வீரம் இன்றளவும் போற்றப்படுகிறது.''""அப்படியானால் நமது பாடப்புத்தகத்தில் இவர் பெயர் ஏன் இடம்பெறவில்லை?'' என்று கேட்டோம்.அவர் சிரித்தபடியே ""இந்த தேசத்தின் தலையெழுத்து அப்படி... பாடப்புத்தகங்களில் குதிராம்போஸýம் இல்லை. பகத்சிங்கும் இல்லை. செங்கோட்டையில் வெகுண்டெழுந்த வாஞ்சி ஐயரும் இல்லை. ஆனால், மத்திய அரசு தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாற்று ஆவணத்தில் இவர்களது வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் ஆவணக் காப்பகங்களில் பெரிய நூலகங்களில் இவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள்'' என்று வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வரலாற்று நாயகர் குதிராம்போஸ் பிறந்த தினம் டிசம்பர் 3.""வல்லமை தாராயோ? - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே''என்று சிவசக்தியிடம் வரம் கேட்ட எங்கள் நெல்லை மண்ணின் மகாகவி பாரதி பிறந்த தினம் டிசம்பர் 11.பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்கள் கணித ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் (ஆரிய வைசிய உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி) அடிக்கடி கேட்பார்: ""ஸ்ரீரங்கத்தில் பிறந்த பிரபலமானவர் பெயரைக்கூறு'' நாங்கள் வேகமாகப் பதில் அளிப்போம். ""ஹேமமாலினி''.அவர் கோபத்தில் சாபமிடுவார் ""நீங்கள் யாரும் உருப்படவே போறதில்லை. அவரைவிட்டால் வேறு யாரையும் தெரியாதா?'' பின்பு சிறிதுநேரம் கழித்து ஆசுவாசமடைந்து அவரே கூறுவார்.""நடிகையின் பெயரைத்தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகத்து கணக்குப்புலிகளை எல்லாம் தனது புதிர்க் கணக்குகளால் மடக்கிய ராமானுஜத்தின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கடா... அவர் ஒரு கணித மேதை. அவரது மனைவிக்கு மேற்கு வங்காள அரசு பென்சன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டு மக்கள் அந்தக் கணிதப்புலியைக் கொண்டாடும் நாள் என்றோ, அந்த நாள்தான் புனித நாள்'' என்று சொன்னது இன்னமும் காதில் எதிரொலிக்கிறது. அந்தக் கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் டிசம்பர் 22.தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்த படிப்பாளி - போராளி பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கர். தன்னைப்படிக்க வைத்த ஆசிரியரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர். லண்டன் நூலகத்தின் அநேகமாக பெரும்பாலான நூல்களைப் படித்தவர்களின் வரிசையில் முன்னணியில் நிற்பவர் சட்டமேதை அம்பேத்கர். அவரது நினைவு நாள் டிசம்பர் 6.புரட்சிகரமான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின் அமைதி வழிக்குத் திரும்பி, ஆன்மிகத் தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரவிந்தரின் நினைவு நாள் டிசம்பர் 5.1936-ல் "சதிலீலாவதி' என்ற திரைப்படத்தை எடுத்து சாதனை புரிந்த திரைப்பட இயக்குநர் அமெரிக்கர் எல்லீஸ்.ஆர்.டங்கன். இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா என்றபோதிலும், தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தமாகவும், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். அவர் நடித்தது என்னவோ ஒரு இன்ஸ்பெக்டர் வேஷத்தில்தான். இவருடன் நடித்த வில்லன் நடிகர் திருநெல்வேலியிலிருந்து, நாடகக் கம்பெனியில் நடிக்க ஓடிவந்த டி.எஸ். பாலையா.இந்தப் படத்தில் இடம்பெற்ற ""கைராட்டினமே கதர் பூஷணமே'' என்ற பாடல் தமிழகம் முழுவதும் பிரபலமானது.காந்திஜியின் மதுவிலக்குக் கொள்கை இப்படத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள். குடித்துச் சீரழியும் எம்.கே. ராதாவின் நடிப்பைப் பார்த்துவிட்டு ""இன்று முதல் நான் குடிப்பதில்லை'' என்று ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்குக் கடிதங்களாய் எழுதினார்களாம்.இப்போது சொல்லுங்கள்... எல்லீஸ்.ஆர்.டங்கனை மறக்க முடியுமா? அவரது நினைவு நாள் டிசம்பர் 1.கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது இனிமையான குரலால் பலரை மயக்கிய இளம் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் திரைப்படம் 1938-ல் வெளிவந்த "சேவாசதனம்'. படத்தை இயக்கியவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம்.கல்கியின் பாடலான ""காற்றினிலே வரும் கீதம்'' பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமுண்டோ? அந்த இசைமேதையின் நினைவு தினம் டிசம்பர் 11.முன்னரே குறிப்பிட்டதுபோல, தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சகாப்தமாய் விளங்கியவர் எம்.ஜி.ஆர். நல்லவனாகவே நடித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப்பெற்று, அரசியல் இயக்கத்தின் மூலமாக அரியணை ஏறியவர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலானாலும் சரி, கவியரசு கண்ணதாசன் பாடலானாலும் சரி, கவிஞர் வாலியின் பாடலானாலும் சரி, அதை எம்.ஜி.ஆர். பாடுவதாகவே மக்கள் நம்பினார்கள். இன்னமும் அவரது ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நிகழ்ந்ததுதான் நாடகக்கலைஞர் விஸ்வநாத தாஸýக்கும் நடந்தது. போலீஸôரின் கெடுபிடிகளால் நாடகங்கள் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். கடன்பட்டார். திருமங்கலம் அவரது சொந்த ஊர்.1940 டிசம்பர் 31-ல் சென்னையில் "வள்ளி திருமணம்' நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் காந்திஜியின் கொள்கைகளை விடுதலை வேட்கைப் பாடல்களை - நாடகத்தில் புகுத்தி விடுவார் என்பதை அறிந்து போலீஸ்காரர்கள் நாடக அரங்கை முற்றுகையிட்டனர்.மயிலாசனம் மீது அமர்ந்து ""மாயமான வாழ்வு இம்மண் மீதே'' என்ற பாடலின் வரிகளைப் பாடும்போதே திணறுகிறார். மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு அதே பல்லவியைப் பாடுகிறார். மேடையின் மீதே சரிந்து விழுகிறார்.முருகன் வேடமணிந்த விஸ்வநாத தாஸின் இறுதி ஊர்வலம் அங்கிருந்தே தொடங்கியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். மதுரகவி பாஸ்கரதாஸின் இணைபிரியா நண்பரான - அந்த நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் இறந்த தினம் டிசம்பர் 31.

Saturday, December 3, 2011

சுகாவின் ’தாயார் சன்னதி’ - ஒரு பண்பாட்டுச் சூழலை முன் வைத்து…

“தாயார் சன்னதி” நூலை இப்பொழுது மீண்டும் நிதானமாகப் படித்த போது, புதுப்புது விஷயங்கள் மனதில் அலை மோதின. திருநெல்வேலி என்ற நிலப்பரப்பில் சுகா கண்ட கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு உண்மையை உரக்கச் சொல்வது போலத் தோன்றுகிறது.

“எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ!” என்று குசலம் விசாரிக்கும் கையில் காசு இல்லாத கல்யாணி ஆச்சி…

சாமியாடும்போது ஊரே தன்னை வணங்கும் அந்த சொற்ப தருணத்தில் மனம் நிறைந்த வாழ்க்கை வாழும் சிவசக்தி ரெடிமேட்ஸில் துணி கிழித்துப் போடும் அருணாசலம் பிள்ளை…

தனது சொந்த வாழ்க்கை சோகமானதாக இருந்தாலும், ஊருக்கெல்லாம் ‘துப்பு’ சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் வீரையன் தாத்தா…

தைப்பொங்கல் என்றாலே கரும்பு, மஞ்சள்குலை, வாழ்த்து அட்டைகள் என்ற பிம்பங்களைத் தாண்டி, சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகளுக்கு மத்தியில் கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடி வியாபாரம் செய்யும் நைந்து போன வாழ்க்கை வாழும் முப்பிடாதி…

அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும் பானைகளையும் கொண்டு வந்து போட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவன்…

இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்கள் வாழ்க்கை கிழிந்து போன துணியாய்க் கிடந்தாலும், வாழ்வின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்கள். எதையும் பாஸிடிவாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள். இவர்களைப் படிக்கும்போது மனதில் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்வின் மீது ஆழமான பிடிப்பு ஏற்படுகிறது.

மரணம் என்றுமே புதிரானது. அதை வேடிக்கையாக எதிர்கொள்ளும் திருநெல்வேலிப் பெரியவர்களின் சம்பாஷணை சுவாரஸ்யமானது. கருப்பந்துறை சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய தாத்தாவுக்குப் பிறகு யார் என்ற அவர் வயதொத்த நண்பர்கள் கிண்டலாய்ப் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்டவை.

“சாப்பிட்டா எங்க வீட்டுப் பிள்ளைல எம்.ஜி.ஆர். சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல…” என்று வாழ்க்கையையே எம்.ஜி.ஆர். வழியாகப் பார்க்கும் கல்லூரிப் பேராசிரியர் அன்னபூரணன், எம்.ஜி.ஆர். படத் தொகுப்பான “காலத்தை வென்றவன்” படத்தைப் பார்த்து உடைந்து போய், மூக்கைச் சிந்தி அழுதபடி நடந்து செல்லும் அய்யாப்பிள்ளை சித்தப்பா, “அவாள மாதிரியெல்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா…” என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும் வாட்ச்மேன் நெல்லையப்பன்…

தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டுகளுக்குச் சற்றே கூடுதலாக ஆக்கிரமித்திருந்த எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம், தமிழ்ச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பாதித்திருந்ததன் அடையாளங்களாய் இவர்களை உணர முடியும்.

துஷ்டி வீட்டில், சாம்பல் கரைத்த அன்று, பந்தி பரிமாறும்போது, “சுப்பிரமணிப்பய சரியா சாப்புடுதானா?மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டிருந்தான்…” என்று பரிமாறுபவர் கேட்க, சுப்பிரமணி ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு ரசமான விஷயம். இரண்டுமே நிஜங்கள் அல்லவா?

‘கிரேக்க’ இனத்தவர் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததைக் கண்டுபிடித்துக் கூறிய மீனாட்சி சுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஜெயமோகனின் நண்பர் சண்முகசுந்தரமும் ‘கிரேக்கர்’ என்று அறியும்போது படிக்கும் வாசகனிடம் வெடிச்சிரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது.

சிவதீட்சை பெற்றிருந்த சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுடன் சேர்ந்து பொருட்காட்சிக்குச் சென்று ‘ராட்டு’ சுற்றிய அனுபவம் இருக்கிறதே…அந்த ஹாஸ்யத்தை எழுத்தில் சொல்லி மாளாது.

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பாடலை ரசித்துக் கேட்கும் ராஜேஸ்வரி அக்கா இப்போது சென்னை என்ற கடலில் கரைந்து போய் விட்டாள். ‘தாயார் சன்னதி’ நூலை அவர் இப்போது படித்தாலும், பாடலைக் கேட்ட அதே சந்தோஷத்தை உணர்வார்கள் என்று தோன்றுகிறது.

அதேபோல, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடும் பெண் சாயல் கொண்ட குகன், ‘நாடகமெல்லாம் கண்டேன்’ என்ற பாடலைப் பாட முயற்சித்த (அதுதானே சரி?) முகம் தெரியாத அந்த சொக்கலிங்க மாமா ஆகியோரும்கூட கனவில் வந்து போவார்கள்.

உச்சினிமாகாளி கொடையின்போது அருள் வந்து சாமியாடிய பிரமு ஆச்சி, மறுநாள் காலை தொலைந்து போன ஒற்றைத் தோட்டை அழுது கொண்டே தரையில் தேடியது எவ்வளவு யதார்த்தமானது!

தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. தனது மகனை அம்மைக்காரி “ஏல, இங்க வா.” என்று கூப்பிட்டதுக்கு, இந்த ஆச்சிகள் ஊர்ப்பிரச்னையாக்கி விடுகிறார்கள்.

ஆழ்வார் குறிச்சியில் இருக்கும் ஆச்சிகள்தாம் எத்தனை பேர்! சைலு தாத்தா வீட்டாச்சியின் கிண்டலான பேச்சை யார்தாம் ரசிக்காமல் இருக்க முடியும்? (”கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறஞ்சா போயிருவியெ?”…) எனக்கும் சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சிதாம். தங்கத்தாச்சியை நினைத்துக் கொள்கிறேன்.

சுகாவின் சங்கீத ஞானம், அது குறித்து எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும்கூட, பிரமிக்க வைக்கிரது. பொறாமைப்படவும் வைக்கிறது.

மொத்தத்தில் “தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளைப் போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.

suka

சுகா

சுகா… உங்களிடம் ஒரு கேள்வி.

திருநெல்வேலியில் உள்ள இந்த பண்பாட்டுச் சூழல், அது உருவாக்கியுள்ள இந்த சாகாவரம் பெற்ற மனிதர்கள், அவர்தம் நகைச்சுவை உரையாடல்கள்… வேறு ஒரு மாறுபட்ட கலாச்சாரத்தில் அல்லது மண்ணில் இவையெல்லாம் சாத்தியமா?

இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

புத்தகத்தை மூடிவிட்டு, கண்கள் மூடிய நிலையில், கடைசியில் யார் நினைவில் தங்கியிருக்கிறார் என்று யோசிக்கும்போது…

திருநெல்வேலி சைவாள் ஹோட்டல் உரிமையாளர் கருப்பையா பிள்ளையின் மனைவி…

வாழ்நாள் முழுவதும் புகை படிந்த அடுக்களை இருட்டுக்குள் காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல் முன்பாக இடுங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெயர் குறிப்பிடாத பெண்மணியின் ஒற்றைக்குரல் (”கல்லு காயுது… செத்த நேரம் ஆகும்…”) மனதைப் பிசைகிறது.

உங்கள் கைகளைத் தேடுகிறேன் சுகா…!

சுகாவின் ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, September 7, 2011

அவனும் அவளும்

அவனும் அவளும் (சிறுகதை)

வாசல் கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழையும் போது மணி 8.30ஐ த் தாண்டியிருந்தது. காம்பவுண்டுச் சுவருக்கும் வீட்டிற்குமான திறந்தவெளி முழுவதும் வேப்பிலைகள் சருகுகளாய் சிதறிக்கிடந்தன. காலையில் என்னதான் பெருக்கித் தள்ளினாலும், மாலையில் வீடு திரும்பும்போது பழுத்த இலைகள் உதிர்ந்து பெருகிக் கிடந்தன. துளிர்த்தலும் உலர்தலுமாய்....... அஞ்சல் பெட்டியைத் திறந்து, உள்ளிருந்த நாலைந்து தபால்களைக் கையில் எடுத்துக் கொண்டு, பூட்டினைத் திறந்தாள் அவள். ஹாலில் இருந்த டீப்பாயில் பையை வீசி விட்டு சோபாவில் சரிந்தாள். அவன் வர இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். சமயங்களில் இரவு 11 மணிக்குக் கூட வந்து "பெல்"லை அழுத்துவான். அப்போதெல்லாம் அரைத்தூக்கத்தில் வந்துதான் கதவைத் திறப்பாள். கை, கால்கள் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தன. நெற்றிப்பொட்டு விண் விண் னென்று தெறித்தது. யாராவது கொஞ்சம் டீ போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அரசு நன்றாக டீப் போடுவான். சனி, ஞாயிறு மாலைப் பொழுதுகளில் அவன் வீட்டிலிருந்தால் அருமையான தேநீர் போட்டு, கோப்பைகளில் ஊற்றிக் கொண்டு வருவான். அந்த தேநீரின் மணமும், சுவையும் அவளுக்குக்கூட வராது. அதில் அவனுக்குப் பெருமை கூட உண்டு. "எப்படி உன்னாலே மட்டும் இப்படிப் போட முடியுது?" அவள் வேண்டுமென்றே கேட்பாள். அது அவனைச் சந்தோசப்படுத்தும். அதற்காகத்தானே கேட்டதே? அவன் மென்மையாகச் சிரிப்பான். எல்லாத்துக்கும் இந்தச் சிரிப்புத்தான்.... அந்தச் சிரிப்பில் தான் தான் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கின்றோமோ என்று கூடத் தோன்றும் அவளுக்கு.

பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி தொடரின் அழுகைச் சத்தம் இவள் காதுகளில் எதிரொலித்துத் திரும்பியது. "ஏன் இவ்வளவு சத்தமாய் அழுகையைக் கேட்டு ரசிக்கிறார்கள்?" என்று எரிச்சலாய் வந்தது. எழுந்து அடுக்களைக்குச் சென்று அவசர அவசரமாய் டீப் போடத் தொடங்கினாள். தலைக்கு மேலே உயரத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகளைத் திறந்து தேநீர்க் கோப்பைகளை எடுத்து வைத்தாள். அரசு போன மாதம் டில்லி போயிருந்த போது வாங்கி வந்த பீங்கான் கோப்பைகள். பிங்க் கலர் பூப் போட்டவை. அவனுக்குப் பிடித்தது இந்த பிங்க் நிறம். சேலை கட்டினாலும், பிங்க் நிறத்தில் கட்டியிருந்தால் அவன் சந்தோசத்தில் கைகோர்த்து நடப்பான். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஒரு லட்ச ரூபாய் செலவில் இந்த மாடுலர் கிச்சன் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விதவிதமான மரவேலைப்பாடுகளுடன்..... பாத்திரங்கள் வைக்க வசதியான கப்போர்டுகள்..... மென்மையான வெளிர் நிற பிங்க் நிற வர்ணம் பூசப்பட்ட மரக்கதவுகள். ஒரு லட்சத்திற்கும் மேலேயே தான் ஆகியிருக்கும்...

ஏழாம் வகுப்பு படிக்கும்போது அப்பா கட்டியிருந்த வீடே ஒரு லட்சத்திற்கும் குறைவு தான்.. வாசலில் ஒரு சின்ன வராண்டா. அப்பா சைக்கிள் நிறுத்த வசதியாக இருந்தது. அதன்பின் சின்னதாக ஒரு ஹால். பக்கவாட்டில் ஒரு பெட் ரூம். ஹாலை அடுத்து அடுக்களை. அடுக்களையில் பாத்திரங்கள் வைக்க போதிய ஸ்லாப் இல்லை என்பது அம்மாவின் நீண்டநாள் வருத்தமாயிருந்தது. கடைசி நேரம் கைக்கடிப்பில் அதில் வந்து இடி விழுந்தது. சுவர்களுக்கு வெள்ளை மட்டும் தான் அடிக்க முடிந்தது. விதவிதமான டிஸ்டம்பர் வர்ணங்கள் அடிக்க முடியாமலே போயிற்று. "ஆறு மாசம் கழிச்சி அடிச்சாத்தான் கலர் நல்லாப் பிடிச்சு நிக்கும்" யாரோ சொன்னதை அப்பா ஆறு வருசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டு அவர் இப்போது வீட்டைக் கட்டியிருக்க வேண்டாமோ என்று கூட அம்மா நினைத்ததுண்டு.

"பாரு..... வேகு வேகுன்னு சைக்கிள்ல போறத.... சின்னதா ஒரு செகண்ட் ஹேண்ட் டிவிஎஸ் 50 வண்டிய வாங்கலாம்ல....." அம்மா அவரை நினைத்துப் புலம்புவாள்.

"இப்பதான் வீடு கட்டியிருக்கு. அடுத்த லோன் உடனே வாங்க முடியாது.... வண்டி வாங்கினா பெட்ரோல் போடணும்... சைக்கிள மாதிரி காத்தடிச்சிட்டு ஓட்ட முடியும்னு நெனைக்கியா?" அப்பா சிரித்தபடி கூறுவார்.

தேநீர்க்கோப்பையை கையில் ஏந்தியபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தாள். டீப்பாயில் கிடந்த "ரிமோட்"டை எடுத்து பொத்தானை அமுக்கினாள்.
சுவரில் பெரிதாய் மாட்டியிருந்த பிளாஸ்மா டிவி உயிர் பெற்றது. சுட்டி டிவியி்ல் மிக்கி மவுஸ் விளையாடிக் கொண்டிருந்தது. அரசு நேரம் கிடைக்கும்போது சுட்டி டிவி பார்ப்பான். காலையில் அவன் பார்த்த சேனல்... அவளுக்கு காமெடிக் காட்சிகள் பிடிக்கும். திருநங்கைகளைக் கேலி செய்யும் ஒரு பழைய நகைச்சுவை ஓடிக் கொண்டிருந்தது. அவளுக்கு இதை ரசிக்க முடியவில்லை. சேனலை மாற்றினாள். ஒரு மலையாளச் சேனலில் மோகன்லாலும், தபுவும் நடித்த பாடல் காட்சி...... ரம்மியமான சுழலில் இருவரும் கை கோர்த்து நடந்து கொண்டிருந்தனர். மெலிதான தூரல் விழுந்து கொண்டிருந்தது. போன மாசம் அம்மா இங்கு வந்திருந்தபோது, ஹாலில் மாட்டியிருந்த இந்த டிவியைப் பார்த்து அசந்தே போனாள்.
"மதி இதென்னடி இப்படி சினிமா தியேட்டர் மாதிரி கேக்குது... டங்டங்னு... எவ்வளவு பெரிசா தெரியுது..... சினிமா பார்க்க தியேட்டருக்கே போக வேண்டாம் போல.... எவ்வளவு டீ ஆச்சி?"
அம்மாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அம்மாவும் அவளும் எல்லா சினிமாவும் பார்த்து விடுவார்கள். அவளை விடவும் அம்மாவிற்குத்தான் சினிமா ஆசை அதிகம். அம்மாவின் ஒரே பொழுதுபோக்கு இதுதான். ராயல் தியேட்டர், ரத்னா தியேட்டர், பாப்புலர் தியேட்டர்..... என மாறி, மாறி ஏதாவது ஒரு படம்.... சமயங்களில் பார்த்த படத்தையே பார்க்க வேண்டி கூட வரும். எல்லா வீடுகளிலும் டிவி பெட்டிகள், மாடியில் ஆன்டெனாக்கள் முளைக்கும் போது அம்மா தான் முதலில் நச்சரித்தாள். "ஏதாவது ஒரு பிளாக் அன்ட் ஒய்ட் டிவியாச்சும் வாங்கி மாட்டுங்களேன்..."

தெரு முழுக்க எல்லோரும் டிவி வாங்கிய பின்னணியில், ஒரு மாலை நேரத்தில் அப்பா சைக்கிளில் ஒரு டிவி பெட்டியை வைத்து உருட்டியபடி வந்து கொண்டிருந்தார். தம்பி வேணு பெட்டியை இறுகப்பிடித்தபடி அப்பாவிற்கு ஒத்தாசையாக வந்து கொண்டிருந்தான்.

புதுசாய் வாங்கிய டயனோரா கலர் டிவியைப் பார்த்து அம்மாவுக்கும் அவளுக்கும் தலைகால் புரியவில்லை.
"ஒரு ஆட்டோ பிடிச்சுக் கொண்டு வர வேண்டிய தான..... சைக்கிள்ல உருட்டிட்டு வாறீக.... எசகு பிசகா சரிஞ்சி போச்சுன்னா..." அம்மா ஆச்சரியத்தில் கூவினாள். அன்று வீடே என்னமாய் கொண்டாட்டமாய் இருந்தது. அக்கா சக்தி, தம்பி வேணு, இவள் எல்லோருமே உற்சாகக்களிப்பில் இருந்தார்கள்..... அன்று இரவு முன் வராண்டா லைட் ரொம்ப நேரமாக எரிந்தது. அப்பா கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல அவள் ஒருநாள் உள்ளே நுழையும் போது தான் பார்த்தாள். ஹாலில் மாட்டியிருந்த பிளாஸ்மா டிவியை. இது எப்ப மாட்டியது?

செல்பேசியில் அவனை அழைத்தாள்.
"சும்மா தான்.... உனக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேன்னு நான் தான் இன்னிக்கு மதியம் வந்து மாட்டறதுக்கு ஏற்பாடு செஞ்சேன்....." அரசு சிரிப்பது தெரிந்தது. அவளுக்கும் சந்தோசமாகத்தான் இருந்தது. திருமணமான ஒரு வருடத்தில் எது பாக்கி இருக்கிறது..... எல்லாமே கச்சிதமாக அதனதன் இடத்தில் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இந்த வீட்டை அரசு வாங்கியிருந்தான். கடனில் முக்காவாசிக்கு மேலேயே கட்டியிருந்தான். காம்பவுண்டுச் சுவரையொட்டி விதவிதமான பூச்செடிகளும் குரோட்டன்ஸ்களும் சிரித்துக் கொண்டிருந்தன. அவன் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா பைக் கூட புதுமாடல் தான் முன்னமேயே வாங்கியிருந்தான். குளிர் சாதனப்பெட்டி, பெட்ரூமில் கிடந்த புதிய படுக்கை, கட்டில், இன்டக்சன் ஸ்டவ், வாஷிங் மெஷின்..... என எல்லாமுமே முதல் இரண்டு மாதங்களில் இருவருமே சேர்ந்து வாங்கியிருந்தார்கள். ஆயிரத்து ஐநூறு சதுர அடியில் நவீனமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டின் சகல அறைகளிலும் எல்லாமுமே தேவைக்கு மேலேயே அலங்கரிக்கப் பட்டிருந்தன.

அவன் சிரத்தையோடு சில காரியங்களைச் செய்யும்போது, அவளும் உடன்சேர்ந்து உதவி செய்வாள். சுவரில் ஆணி அடித்து, ரவி வர்மாவின் அந்த ஓவியத்தை மாட்டும்போது தூரத்தில் நின்று ரசிப்பாள்.
"எல்லாம் சரியாயிருக்கா?"

அவன் புருவத்தை உயர்த்திக் கேட்பான். அவள் ஆமோதித்துக் கையசைப்பாள். அவன் மென்மையாய் சிரிப்பான்... அதே சிரிப்பு!

"குட்டிப்பாப்பா மட்டும் வேண்டாம்னு ஏன் சொல்ற அரசு?" அவள் கண்களில் நீர் கோர்க்க கேட்பாள் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வாள்.

"ஏய் கழுதை! யாராவது பாப்பா வேணாம்னு சொல்லுவாங்களா..... கொஞ்சம்... கொஞ்சம் காலம் பொறு.... மூணு பிள்ளைங்க வேணும்னாலும் பெத்துக்கலாம்.... ஓகேயா?" அவன் சிரித்தான். அவளை மென்மையாய் அணைத்தான். அவள் திமிறினாள்.

"போதும்..... விடு இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுக்கறது? என்னால ஒத்தையில் இருக்கமுடியல..." அவள் கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

"என்ன மதி இப்படிக் கோபப்படறீயே டா! இன்னும் ஒரு வருஷம் பொறுக்க மாட்டியா.... இப்ப நீ கன்சீவ் ஆனேன்னா.... ஆறு மாசத்துலே வேலைய விட வேண்டி வரும்.... அப்புறம் வேற கம்பெனிக்கு போகணும்னாலும் முடியாதுப்பா.... ஒரு வருஷம் நீ சும்மா தான் வீட்டுல இருக்கணும்.... அது இத விடப் போரா இருக்கும்பா... புரிஞ்சுக்கவே மாட்டிங்கியே...."

அவனும் சமயங்களில் இப்படிக் கோபப்படுவதுண்டு. இந்த வீட்டில் எல்லாம் இருப்பதாக அவன் நினைத்துக் கொள்வதை அவள் வெறுத்தாள். வீட்டில் எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் ஒழுங்கு மாறாமல் இருக்கின்றன. தரை கூட அழுக்காவதில்லை. எல்லா ஒழுங்கையும் சீர்குலைக்க ஒரு மழலைச் சத்தம் வேண்டும். தரையில் இரைந்து கிடக்கும் பொம்மைகள் வேண்டும். பின்வாசல் கொடியில் குழந்தைகளின் ஈர ஜட்டிகள் காய வேண்டும். ஈரம் சொட்டச்சொட்ட காட்டன் சட்டைகள் தொங்க வேண்டும்.

டீப்பாயில் கிடந்த அம்மாவின் கடிதத்தைப் பார்த்தாள். என்ன எழுதியிருப்பாள் என்று தெரியும். கவரை உடைக்க மனசு வரவில்லை. விலாவரியாய் எல்லாம் எழுதிவிட்டு " ஏதும் விசேசம் உண்டா?" என்று கேட்டு முடித்திருப்பாள்.
அரசு இன்றைக்கு சரியாக 9.30 மணிக்கு வந்து விட்டான் "தலை வலிக்குதா மதி?" அவன் அவள் அருகே அமர்ந்து அவள் தலையைக் கோதி விட்டான். பேண்ட், சமர்ட்டைக் கூட மாற்றாமல் உட்கார்ந்திருந்தான்.

"நான் ஒண்ணு கேப்பேன்... மாட்டேன்னு சொல்ல மாட்டீங்களே?" அவள், அவன் மடியில் தலை சாய்த்து கேட்டாள்.

"ம்.... சொல்லு..." அவன் கைகள் இன்னமும் தலையைக் கோதியபடியே இருந்தது.

"நான் ஒரு வாரம் எங்கம்மா வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா?"

அவள் கண்கள் பளபளக்க கேட்டாள். அவன் அவளை முதன்முறையாக வித்தியாசமாகப் பார்த்தான். பின் சிரித்தபடி தலையாட்டினான். ஆனால் அது வழக்கமான சிரிப்பு போல இல்லை.

Reply
Reply to all
Forward



Monday, August 29, 2011

லோக் பால் வந்தாச்சு...

அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றி
நாடெங்கும் மக்கள் கொண்டாட்டம்..(இந்த மக்களில் அம்பானி சகோதரர்களும் அடக்கம்.)
ஹையா...லோக் பால் வந்தாச்சு...
நாளை முதல் தாலுகா ஆபீஸ்ல , பத்திர பதிவு ஆபீஸ்ல , வட்டார போக்குவரத்து அலுவலகத்துல யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்...ஹையா ...

வந்தே மாதரம் ..ஜெய் ஹிந்த் !

Monday, July 25, 2011

முகம்

பேருந்து நிறுத்தத்தில் தூத்துக்குடி செல்வதற்காக காத்திருக்கும்போது எதிரே கிருஷ்ண பகவான் தோன்றினார்.சட்டைபையினுள் கையை விட்டு துளாவி, கிடைத்த இரண்டு ரூபா நாணயத்தை அவர் நீட்டிய தட்டில் போட்டேன்.கிருஷ்ணர் நகர்ந்த மறு நிமிடத்தில் கால்சலங்கை ஒலிக்க அனுமன் பிரசன்னமானார்.என்னிடம் வேறு சில்லறை காசுகள் ஏதும் இல்லை.அனுமன் வருத்தப்படவில்லை. அடுத்தவரிடம் நகர்ந்து விட்டார்.சாலையின் எதிர்புறத்தில் இருந்து கரடி ஒன்று சில்லரைகாசுகளை இன்னொரு குவளைக்கு மாற்றியபடி சாலையை கடந்து வந்து கரும்புச்சாறு விற்பவரிடம் ஜூசுக்கு ஆர்டர் கொடுத்தது.என்ன விநோதமாய் பார்க்கிறீர்கள்?
தசரா பண்டிகை தொடங்கி விட்டால் பாளையம்கோட்டை களைகட்டி விடும்.வீதியெங்கும் கிருஷ்ணர்களும், அனுமர்களும் வலம் வருவார்கள்.பக்தர்களிடம் காணிக்கை பெற்று குலசெகரபட்டனத்தில் கடைசி நாளில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வார்கள்.இந்த ஒன்பது நாட்களிலும் விதவிதமான வேடங்களில் வரும் பக்தர்களை ரசிப்பது எனக்கு பிடித்தமானது.ரோஸ் பவுடர்களை முகத்தில் ஏகமாய் அப்பி, லிப்ஸ்டிக் போட்டு கூலிங் கிளாஸ் அணிந்து கால் சலங்கை ஒலிக்க இவர்கள் வருவதை பார்த்தவுடன் கல்லாபெட்டியில் உட்கார்ந்து இருப்பவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் சில்லறை காசுகளை போடுவார்கள்.தசராவுக்கு என்றே சில நூறு ரூபாய்களுக்கு சில்லறை மாற்றி வைத்திருப்பார்கள்.
சந்தை மைதானத்தில் ராட்சத ராட்டினங்களை மாட்டி கொண்டிருந்தார்கள்.இன்று இரவில் இருந்தே குழந்தைகள் கூட்டம் கூட்டமாய் வர தொடங்கி விடுவார்கள்.திருவிழா சேதியை முன்னறிவிப்பு செய்யும் பலூன் காரர்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருந்தார்கள். டிஜிட்டல் வாட்சுகள் மலையாய் குவிந்துவிட்டதால் பிளாஸ்டிக் வாட்சுகளை குழந்தைகள் வாங்குவது இல்லை போலும்.மின்சாரத்தில் இயங்கும் டோரா டோரா, ஆர்க் போன்ற ராட்சச ராட்டினங்கள் வந்தபின் பழைய குடைராட்டினம், ரங்க ராட்டினம் போன்றவை காணாமல் போய் விட்டன.ஒவ்வொரு இரவும் கலைநிகழ்ச்சிகள் நடத்த பெரிய கொட்டகையினை வியாபாரிகள் சங்கம் சார்பில் எழுப்பி இருந்தனர். பேருந்தில் அமர்ந்து டிக்கெட் எடுப்பதற்காக சட்டைபையினுள் இருந்து ரூபாயை எடுக்கும்போது கூடவே அம்மா எழுதிய கடிதமும் வந்தது.சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு ஊருக்கு வரசொல்லி எழுதி இருந்தாள்.வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தீபாவளிகாவது குடும்பத்துடன் வா என்று முடித்திருந்தாள்.இந்த ரெண்டு வருசமாய் தான் எதாவது ஒரு வேலை வந்து போகமுடியாமல் போய் விடுகிறது.பொங்கலைபோல அம்மா ரொம்ப விரும்பிகொண்டாடும் பண்டிகை சரஸ்வதி பூஜை.

சின்ன வயசில் நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்திருப்பதை பார்க்க அம்மாவுடன் சென்ற ஞாபகம் மனசில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ராமச்சந்திரன் டாக்டர் வீட்டில் விதவிதமான பொம்மைகள் பத்து பதினைந்து அடுக்குகளில் பளிச் சென்று இருக்கும்.பொம்மைகள் அருகில் சென்று பார்க்கலாம்.ஆனால் தொடக்கூடாது.டாக்டரின் பொண்ணுகள் லக்ஷ்மியும், ரேவதியும் கீர்த்தனைகளை பாடிகொண்டிருப்பர்கள். பூஜை முடிந்த பின்னர்தான் சக்கரை பொங்கலும் சுண்டலும்.வடகோடியில் இருக்கும் கோமளா அக்கா வீட்டில் அறுபது வாட்ஸ் பல்ப் உமிழும் சுமாரான வெளிச்சத்தில் அபூர்வமான பொம்மைகளை ரசித்த அனுபவம் உண்டு.மேளதாளங்களுடன் மாப்பிள்ளை அழைத்து செல்வது போன்ற ஊர்வலம் , தவழும் கிருஷ்ணர் , தொட்டிலில் ஆடும் கிருஷ்ணர், மரத்தில் ஒளிந்து இருக்கும் கிருஷ்ணர், என பல ரூபங்களில்..பூஜை முடிந்தாலும் முடியாவிட்டாலும் துண்டு வாழை இலையில் பாசிபருப்பு சுண்டலை மடித்து மாமிக்கு தெரியாமல் என் கையில் அழுத்துவாள் கோமளா அக்கா."சின்ன பிள்ளைகளை சாமி ஒண்ணும் செய்யாது " என்பாள் அவள்.
"ஒம் சக்தி ஓம் சக்தி ஒம் "பாரதியின் பாடலை கண்களை மூடிய படி கோமளா அக்கா பாடுவாள்.அந்தபாடலை எங்கே கேட்டாலும் கோமளா அக்கா நினைவு வந்து விடும்.ரொம்ப நாளாய் கோமளா அக்காவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற செய்தி மட்டும் வந்து அடி மனசில் தங்கியது.

சரஸ்வதி பூஜைக்கு அம்மா சரஸ்வதி படம் எல்லாம் வைத்து கும்பிடுவது இல்லை. அம்மியில் மஞ்சளை மையாய் அரைத்து அதை உருட்டி முகமாய் செய்து காபி குடிக்கும் கெண்டியின் பக்கவாட்டில் ஒட்டவைத்து கண், காது மூக்கு செய்து சரஸ்வதியின் முக தோற்றத்தை அப்படியே கொண்டு வந்துவிடுவாள் . ஆரம்பத்தில் அம்மா தான் இதை செய்து வந்தாள். பின்பு சுந்தரம் அண்ணன் மதுரையில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது அவனிடம் இந்த பொறுப்பு விடப்பட்டது. அண்ணனுக்கு சாமி நம்பிக்கை அவ்வளவாக இல்லாத போதும் மஞ்சளில் சரஸ்வதி முகம் செய்வதில் அலாதியான பிரியம் உண்டு. அவனை சுற்றி நானும் அக்கா இருவரும் சூழ்ந்து கொண்டு அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக இருப்போம்.அம்மா அதிகாலையில் குளித்து அம்மியில் அரைத்த மஞ்சளை அண்ணன் கையில் கொடுக்கும் போது அவன் குளித்து விட்டானா என்பதை உறுதிபடுத்தி கொள்வாள். சாமி விசயத்தில் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது அவளின் தீர்க்கமான கொள்கை.

அண்ணனுக்கு ஓவியம் நன்றாக வரும்.எனவே அதே சிரத்தையுடன் இதில் ஈடுபடுவான்.அரைத்த மஞ்சளை குழைவாய் கெண்டியில் அப்பி முக வடிவத்துக்கு சீர் செய்வான்.மீனா அக்காவின் கையில் இருக்கும் பிச்சிபூவை வாங்கி சிறிய இதழ்களை பிரித்து எடுத்து கண்களாய் ஒட்டுவான். வள்ளி கையில் வைத்திருக்கும் கண் மை டப்பாவில் இருந்து மையை குச்சியால் இழுத்து புருவங்கலாய் வளைப்பான்.பின்புறத்தில் இருந்து கொஞ்சம் மஞ்சளை உருவி மூககாய் ஓட்ட வைப்பான்.ஈர்க்குச்சியால் மூக்கின் கீழ்புறம் ரெண்டு துளைகள் ..குங்கும சிமிழை திறந்து சிணுகொலியால் குங்குமத்தை எடுத்து உதட்டருகே வைத்து ஒரே கோட்டில் அழகுற வளைத்து விடுவான்.அப்போது அவன் முகம் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கும்.அந்த வளைவில்தான் சரஸ்வதியின் புன்னகை வெளிப்படும்.கருப்புமை பாட்டிலோடு நான் நின்று கொண்டு இருப்பேன்.மை பாட்டிலின் மூடியில் கொஞ்சம் மையை ஊற்றி சின்ன தூரிகையால் சரஸ்வதியின் தலைபகுதியை கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாக்கி கொண்டே வருவான். மஞ்சளின் ஈரபதத்தில் மை விரிந்து பரவி செல்லும்.
"கண்ணை சீக்கிரம் வரையேன்"
மீனாவும் வள்ளியும் தொணதொணப்பார்கள்.கண்ணை கடைசியில்தான் திறக்கவேண்டும்.எதையும் காதில் வாங்காமல் அவன் போக்கிலேயே இயங்கி கொண்டு இருப்பான்.காதில் அணிந்து இருக்கும் மீனாவின் தோடுகளை கழட்டிசரஸ்வதியின் காதில் அழகாக மாட்டி விடுவான்.அம்மாவின் சிவப்பு கல் மூக்குத்தியும் வள்ளியின் சின்னதான தங்க சங்கிலியும் முகத்திற்கு எழில் கூட்டும். கடைசியில் நெற்றிசூடியை உச்சந்தலையில் அணிவித்து கண்களை திறப்பான்.சரஸ்வதி தேவி உயிர்ப்புடன் புன்னகை புரிவாள்.கண் சிமிட்டாமல் உடல் சிலிர்க்க நாங்கள் பார்த்துகொண்டிருப்போம்.

எங்களது நோட்டுகளையும் புத்தகங்களையும் மேஜை மீது அடுக்கி புதுசாய் எடுத்த சீட்டி துணியால் அவற்றை மூடி அண்ணன் செய்த சரஸ்வதி முகம் தாங்கிய கெண்டியை மேலே வைத்து மாலை அணிவித்து பூஜையை தொடங்குவாள் அம்மா.இவ்வளவு நேரம் நடந்த ஆர்ப்பாட்டம் எதுவும் காதில் விழுந்தும் விழாததுமாய் அப்பா ஈஸி சேரில் இருந்து எழுந்து வந்து பூஜையில் கலந்து கொள்வார்.

"சுந்தரம் செஞ்ச சாமிய பாத்திகளா..?"
அம்மா சூடனை காட்டியபடியே அப்பாவிடம் சொல்வாள்.
"ம்..ம்..பரவா இல்ல ..அம்மனுக்கு எதுக்கு கண் மை எல்லாம் போட்டு இருக்கான் " என்பார் அப்பா.
அப்பாவின் குணம் இப்பிடித்தான். எப்போதுமே பிள்ளைகளின் திறமையை வெளிபடையாய் புகழ்ந்தது இல்லை.எங்களுக்கு இதெல்லாம் பழகி போய் இருந்தது.மேலும் நாங்கள் உற்சாகமாய் இருப்போம்.வருடம் முழுதும் படிக்கிறோமோ இல்லையோ சரஸ்வதி பூஜை அன்று படிக்கவோ எழுதவோ வேண்டியது இல்லை.சட்டபூர்வமாக இன்று படிக்க கூடாது என்ற உத்தரவு இருப்பதை போல உணர்வு எங்கள் எல்லோருக்கும்.மீறி படித்தால் கண் அவிஞ்சு போகும் என்று கூட சொல்லி கொள்வோம். பூஜை முடிந்தவுடன் அப்பா "வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள்.."பாடலை பாடுங்க ..என்பார்.பாரதியின் இந்த பாடல் எங்களுக்கு மனப்பாடம்.எத்தனை வருடங்கள் இதை படிச்சுருக்கோம் .தாமரை பூவை ரொம்ப நாளா பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் கடைசியில் கோமளா அக்கா வீட்டில் பார்த்த போது ஆச்சர்யமாய் போனது.சரஸ்வதி அமர்ந்து இருக்கும் தாமரை பூ இவ்வளவு சின்னூண்டாக இருக்குதே என்ற வியப்பு..
அண்ணன் கொல்லைபுறத்தில் நின்று கொண்டு பூம்பருப்பு சுண்டலை கொறித்தபடி கொடுக்காபுளி மரத்தில் பழங்கள் ஏதும் காய்த்து தொங்குகிறதா என்று பார்த்துகொண்டு இருப்பான்.
"சாமி கும்பிடுற நேரத்துல கொல்லைப்புறதுல நின்னுகிட்டு இருக்கான் பாரு .."
அப்பா அவனை திட்டுவார்.
அம்மா எதுவும் பேசாமல் எல்லோருக்கும் பிரசாதத்தை இலையில் வைத்து கொடுப்பாள் .
"அண்ணன் ஏம்மா இப்படி இருக்கான் " என்று நாங்கள் கேட்டாள், அம்மா
"அதனாலே இப்ப என்ன ...கொஞ்ச நேரத்துக்கு முன்னால எவ்வளவு கண்ணும் கருத்துமா செஞ்சான்..அது போதும் அவனுக்கு..நமக்கு கிடைக்குற பலன் எல்லாம் அவனுக்கும் கிடைக்கும்."
அம்மா அண்ணனை விட்டு கொடுக்காமல் பேசுவாள்.
அண்ணன் வேலை கிடைத்து பாம்பே சென்ற பிறகு எப்போதாவது தான் வரும்படியாகி போனது.அவன் வேலை இப்போது என்னுடைய வேலையாக மாறிவிட்டது.அண்ணனின் செய்நேர்த்தி என்னிடம் இல்லை என்றாலும் அவனது நுட்பமான முறைகளை கையாண்டு பார்த்ததில் எனக்கு வெற்றிதான்.மீனாவும் வள்ளியும் கேலி செய்தபடி எனக்கு உதவினார்கள்.வள்ளி கவரிங் கடையில் இருந்து செட்டாய் வாங்கி வந்து சரஸ்வதியின் தலையில் நெற்றிசூடி, காதுலே தோடு, மூக்கிலே மூக்குத்தி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு என விதவிதமாய் அலங்கரிக்க உதவி செய்தாள். அம்மாவுக்கு அம்மனை பார்த்தவுடன் சந்தோஷம் தாளவில்லை.
"தாத்தாவோட வாரிசில்லையா நீ ..அவரோட திறமை உனக்கும் வராமலா போகும்? " என்பாள் அம்மா.
அப்பாவின் அப்பா நல்ல ஓவியராம்.அந்த காலத்துலே கோவிலில் ஓவியங்கள் வரைவதிலும் களிமண் சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராய் இருந்தவராம்.அவரது பழைய போட்டோ ஒன்று அப்பாவின் பெட்டியில் உள்ளது.தலைமுறை தலைமுறையாய் ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டுருப்பது அம்மாவுக்கு திருப்தி அளித்து கொண்டுஇருக்கிறது.அதன் பிறகு வந்த தசரா பண்டிகைகளில் இடையிடையே அண்ணன் வரும்போது நான் முகம் செய்யும் அழகை அருகில் நின்று ரசித்து பார்பான்.அப்போது எல்லாம் வள்ளி மட்டுமே கூட மாட இருந்து உதவுவாள்.மீனாவை தென்காசியில் கட்டி கொடுத்திருந்தது.
என்னுடைய திருமணத்துக்கு பின்னால் நான் பாளையம்கோட்டைக்கு இடம் பெயர்ந்தபோது அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.
"பாளையங்கோட்டை தசரா ன்னா தெரியாதவங்க யாரு இருக்கா? ராத்திரி பத்து சப்பரங்கள் வரும்.அந்த காலத்துலே திரிசூலிமாரியம்மன் கோவில் பக்கத்துல நின்னுபார்ப்போம் ..தாமிரபரணியும் தசராவும் இருக்கும் போது வேற என்ன வேணும் ?
சமய நம்பிக்கைகளை தாண்டி கலாச்சாரத்தின் ஆணிவேராய் திகழும் திருவிழாக்கள் இல்லாத மனித சமூகத்தை கற்பனை பண்ணவே முடியவில்லை.

ஆபீசில் ஆடிட் நடந்து கொண்டிருப்பதால் விடுப்பு எடுத்து செல்லமுடியாது.அதனால் சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் புறப்பட்டு மதுரை சென்று அன்று இரவே ஊர் திரும்ப நானும் என் மனைவியும் முடிவு செய்தோம்.பையன் கார்த்திக்கும் உற்சாகமாக கிளம்பி விட்டான். முன்னறிவிப்பு இன்றி இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணினோம்.

அம்மாவிற்கு அதிர்ச்சியில் கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை.
"வாரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலையே "
பேரனை கட்டி கொண்டாள்.ஈஸி சேரில் படுத்திருந்த அப்பா நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"இப்பதான் சாமி கும்பிட்டு முடிச்சோம்.நேத்தே போன் பண்ணி சொல்லிருக்கலாமே ?"
அப்பாவின் முகத்தில் லேசாக ஒரு புன்முறுவல்.
"உன்னோட பாட புஸ்தகம் ஏதும் கொண்டு வந்துருக்கியம்மா ?"
ஆச்சி பேரனிடம் அக்கறையாய் கேட்டாள்.அவன் உதட்டை பிதுக்கினான்.
"இல்லேன்னா பரவாயில்லை..வாறது தெரிஞ்சா சக்கரபோங்கல் வச்சுருக்கலாம்.
ரெண்டு கிழடுகளுக்கும் சக்கரை வியாதி..பொறியும் கடலையும் வச்சு கும்பிட்டாச்சு..
அம்மா பரபரப்புடன் உள்ளே போனாள்.
ஹாலில் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டி விட்டு திரும்பும்போது கண்ணில் பட்டது இடது புற மேஜையின் மீது அடுக்கி வைக்கபட்டிருந்த அப்பாவின் புத்தககட்டிற்கு மேல் வீணை வாசிக்கும் கலைவாணி சிலை..பிளாஸ்டர் ஆப் பாரிசில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற சரஸ்வதி .பத்தியின் வாசனை அறையெங்கும் பரவி இருந்தது .கார்த்திக்கும் சிவகாமியும் விபூதி எடுத்து பூசி கொண்டனர்.
பையன் சரஸ்வதி சிலையையும் என்னையும் மாறி மாறி பார்த்தான்.ஆச்சியின் முகத்தை பார்த்து எதையோ கேக்க எண்ணியது போலிருந்தது.
ஆச்சி புரிந்து கொண்டாள்.
"ஆமா ..பொறகு என்ன செய்ய ..இங்க ஆச்சியும் தாத்தாவும் மட்டும் தான் இருக்கோம். .உங்க அப்பா வந்தா அழகா முகம் செய்வான்..வாறது தெரியாம போச்சே ..முன்னால எல்லாம் ஆச்சியே செஞ்சுருக்கேன்..இப்பல்லாம் முடியாது ராஜா..கையெல்லாம் கொஞ்சம் நடுக்கம் இருக்கு..போன வாரம் இத தெருவில வித்துட்டு போனான்..நல்லா இருக்கா?"

கலைவாணியை உற்று நோக்கினேன்.கழுத்தில் கிடந்த அம்மாவின் ரெட்டை வட
சங்கிலியின் தாமரை டாலர் சூரிய ஒளி பட்டு மின்னிக்கொண்டு இருந்தது.என் வாய் முணுமுணுத்தது.
"வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியில்இருப்பாள்
கொள்ளை இன்ப குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளதிருப்பாள்.."

Sunday, July 24, 2011

அப்பாவின் கடிதம்


tPl;bw;Fs; EioAk;NghNj jghy; ngl;bapy; fbjk; VJk; te;jpUf;fpwjh vd;W jpwe;J ghH;j;Njd;. re;jh fl;bapUe;j xU gj;jphpf;if> jpUkz miog;gpjo; xd;W> rq;ff; $l;lj;jpw;F miog;G tpLj;jpUe;j xU jghy; fhHL vdg; ngl;b epiwe;jpUe;Jk;> mg;ghtplk; ,Ue;J fbjk; tuhjJ nuhk;gTk; Vkhw;wj;ijj; je;jJ. tPl;ilj; jpwe;J> te;jpUe;j fbjq;fisg; gphpf;f kdrpd;wp `hypy; cs;s Nki[apd; kPJ itj;jgbNa ehw;fhypapy; rha;e;Njd;. fz;iz ,Wf;fpf; nfhz;L te;jJ. ,uz;L GUtq;fSf;FkpilNa tpz;tpz; vd;W njwpj;J tpLk; typ new;wpg; nghl;nlq;Fk; gutpaJ.

,t;tsT ehSk; ,g;gb Nahrpj;jjpy;iy. ,d;W mg;ghtpd; fbjk; te;jpUf;Fk; vd;w ek;gpf;if Vd; NjhzpaJ vd;W njhpatpy;iy. filrpaha; vg;nghOJ te;jJ? %d;W thuq;fSf;F Nky;> Vd; xU khjk; $l MfpapUf;Fk;. mg;ghtpw;F clk;G rhpapy;iy. fle;j ,uz;L Mz;LfshfNt cly;epiy rhpapy;iy vd;whYk; mg;ghtpd; fbjq;fs; tuj;jtwpajpy;iy. tho;f;ifapy; Kjd;Kiwahf mg;ghtpd; fbjk; tuhjjw;F kdR miygha;e;jJ.

mg;ghtpw;Fk; fbjj;jpw;Fkhd cwT myhjpahdJ. fbjk; vOJtij tho;f;if newpKiwfSs; xd;whff; fUJgtH mtH. rpd;d tajpy; tPl;Lf;fzf;F vOjpf; nfhz;bUf;Fk; NghJ> mg;gh <]pNrhpy; mkHe;jthNw gyifia kbapy; itj;Jf;nfhz;L ,d;Nyd;l; nyl;lH vOjpa fhl;rp ,d;dKk; epidtpy; ,Uf;fpwJ. cwtpdHfSf;Fk; ez;gHfSf;Fk; fbjKk;> gjpy; fbjKkha; xNu rkaj;jpy; Ie;jhW fbjq;fs; vOJthH. te;j fbjq;fis mUfpy; itj;Jf;nfhz;L> gjpy; vOjpagpd;G ,d;d Njjpapy; gjpy; vOjg;gl;lJ vd;W vOjpagpd;Ng fk;gpapy; Fj;jp itg;ghH. vOjp Kbj;jJk; tPl;bd; cs; gf;fk; jpUk;gp mf;fhisNah> vd;idNah rj;jkha; $g;gpLthH Nrhj;Jg;gir vLj;jpl;Lth.

Nrhw;Wg; gUf;iffis erpj;J xl;Ltij tplTk; ,l;ypj; Jz;il giraha; erj;J xl;LtJ vdf;Fg; gpbj;jkhdJ. xNu Neuj;jpy; Ie;jhW Nrhw;Wg; gUf;iffis itj;J xl;Lk;NghJ mg;gh rj;jk; NghLthH. VNy! xU nyl;liu $wh xl;lj; njhpAjheP xl;lw Nrhj;Jf;F jghy;ngl;bapy tpOfpw vy;yhj; jghYk; Nre;J xl;bf;fpLk;. Vl;b! mtd;l;l ,Ue;J thq;fp eP xl;L.. vd;W mf;fhis mjl;LthH. xw;iwr; Nrhw;Wg; gUf;ifapy; xU ,d;Nyd;l; nyl;liu xl;btpLk;. mghu Gj;jprhyp mts;.

rpy rkaq;fspy; mLf;fis tiu nrd;W Nrhw;Wg; gUf;iffis vLj;J tur; Nrhk;gy;gl;L> mg;ghhtpd; fz;ghHitf;F mg;ghy; epd;W thapy; CWk; vr;rpiy ckpo;$l;b> ehf;fhy; jltp xl;btpLtJk; cz;L.

fbjk; vOJtjpYk; mg;gh rpy jpl;ltl;lkhd tiuaiwfs; tFj;jpUg;ghH. fbjk; vOjj; Jtq;Fk; Kd;G g;hpy; ,q;f; ghl;bypy; ,Ue;J Ngdhtpy; ika+w;wp gioa Jzpahy; mijj; Jilj;J kPz;Lk; Jzpiag; gioa ,lj;jpy; kiwthf itj;Jtpl;L> <]pNrhpy; mkHe;J fbjk; vOjj; Jtq;FthH. ngUk;ghYk; jghy;fhHLfisNa mg;gh gad;gLj;JthH. fhHbd; KOtpiyiaAk; gad;gLj;jpf; nfhs;s Ntz;Lk; vd;gJ Nghy fhh;by; vOjpagpd;G Nky;Gwk;> tyJGwk;> ,lJGwk; vd vy;yh ,ilntspfspYk; tp\aq;fis EZf;fp> EZf;fp vOJthH. rw;W $Ljyhd tp\aq;fs; vOj Ntz;b te;jhy; kl;LNk ,d;Nyz;l; nyl;lH my;yJ ftH gad;gLj;JthH. ve;nje;j jghy;ngl;bapy; vj;jid kzpf;F jghy; vLg;ghHfs; vd;w tpguk;$l Jy;ypakha; njhpAk; mtUf;F. fbjq;fis vOjp Kbj;jgpd;G fbfhuj;jpy; kzp ghHg;ghH. kjpak; xU kzp vd;why; [py;tpyh]; mUfpy; cs;s ngl;b khiy 4 kzp vd;why; gs;spthry; vjpNu cs;s jghy;ngl;b.

irf;fps; vLj;jpl;Lg; Ngh,g;g vLf;fpw Neuk;jhd;. ngl;bapNy Nghl;L;l;L> ifahy; cs;Ns Jyhtp rhpah tpOe;Jl;Ljhd;D ghh;f;fZk;. kio vJTk; ngQ;RJd;dh eidQ;rpuhk ,Uf;fZk;. mg;ghtpd; Kd;[hf;fpuij gpukpg;ig Cl;Lk;.

mg;ghtpd; fbjq;fis xl;bAk; jghy;ngl;bapy; Nrh;j;Jk; nfhz;bUe;j vdf;F> mg;gh vOjpa Kjy; fbjk; ehd; fy;Y}happy; gbj;j fhyj;jpy; fy;Y}hp tpLjpapy; khztHfSf;F tUk; jghiy jfty; gyifapy; nrUfp itj;jpUg;ghHfs;. mNefkha; vdf;F vd;W te;j Kjy; fbjNk mg;ghTila fbjkha;j; jhd; ,Uf;Fk;.

md;G epiwr; nry;td; FkuFUguDf;F mNef Mrph;thjqfs;!. ,iwtdUshy; nkd;NkYk; eyk; cz;lhtjhf! vd;W fbjk; Jtq;fp khiy Neuq;fspy; CH Rw;whky; tpLjpapNyNa ,Uf;fNtz;Lk;. rdpf;fpoikfspy; vz;nza; Nja;j;Jf; Fspg;gJ mtrpak;. ,utpy; ehl;Lg; goq;fs; rhg;gpl;lhy; ey;yJ. ,utpy; fz;tpopj;Jg; gbj;J mjpf kjpg;ngz;fs; ngwg;glNtz;Lk;. nfl;l ez;gHfspd; rfthrj;jhy; mbf;fb rpdpkh ghHg;gJ ntl;bahf mul;il mbg;gJ Nghd;wtw;iw mwNt jtpHf;f Ntz;Lk;. xU Mrphpahpd; igad; vd;w ew;ngaiuf; fhg;ghw;WtJ Mfg; ngUk; flik vd;nwy;yhk; gy;NtW mwpTiufNshL fbjk; nry;Yk;. fbjj;ijg; gbj;j rf ez;gHfs; mbj;j NfypAk; fpz;lYk; nfhQ;reQ;rky;y. thuk; xU fbjk; mg;ghtplkpUe;J te;JtpLk;. gy rkaq;fspy; ez;gHfNs mijg;gphpj;J gbj;J tpLtJk; cz;L. jpUk;gg; jpUk;g mwpTiufspd; njhFg;gha; fbjq;fs; khWk;NghJ> fbjq;fs; gphpf;fg;glhky;$l Nki[apd; Gj;jfq;fSf;F mbapy; kiwe;J NghapUf;fpd;wd. mg;gh MW fbjq;fs; Nghl;lhy;> xU fbjk; gjpy; NghLtJ vd;gJ vdJ gof;fkha; khwpg;NghdJ. ehd; gjpy; vOjpa %d;W jpdq;fSf;Fs; mg;ghtpd; gjpy; fbjk; tpiutha; tUk;. %d;W gf;f ,d;Nyz;l; fbjj;jpy; gjpy; vOj vd;d tp\ak; ,Uf;fg; NghfpwJ?.

cdJ fbjj;jpy; cd;Dila gs;spj; Njhod; jkpo;nry;td; vd;W vOjpapUe;jha;. mJ jkpo;r;nry;td; vd;W ,Uf;f Ntz;Lk. re;jpg;gpiofs; Mq;fhq;Nf njd;gLfpd;wd. jkpo; Mrphpahpd; kfdha; ,Ue;J nfhz;L ,yf;fzg;gpiofNshL fbjk; vOJtJ vdf;F mtkhdkhf ,Uf;fpwJ…”

vy;yhtw;wpYk; Fw;wk; fz;Lgpbg;gNj mg;ghtpd; Ntiyahfg; Ngha;tpl;lJ. xU Ntis Mrphpauhf ,Ug;gjdhy; ,g;gbnahU kNdhghtk; cUthfp tpl;lNjh vd;dNth? tpilj;jhs; jpUj;Jk; MrphpaHfspd; rptg;G ik Ngdh> tpilj; jhspy; vq;Nf jtW ,Uf;fpwJ> mij vg;gbr; Ropf;fyhk; vd;wgbNa efUk;. rhpia tplTk;> jtiwr; Rl;bf; fhl;lj; Jbf;Fk; rptg;G ik Ngdhtpd; Fzhk;rk;jhNdh vd;dNth?

fy;Y}hp Ngr;Rg; Nghl;bfspy; rpWfijg; Nghl;bfspy; ghpRfs; ngw;W mij mg;ghtplk; gfpHe;J nfhz;l fhyq;fspy; rhp rhp! NgRwnjy;yhk; rhpjhd;! eP vd;d murpay;thjpahfth NghfNghw? Nghl;b Nghl;bd;D nrhy;yp gbg;ig Nfhl;il tpl;LwhNj.. vd;W mtH nrhy;Yk;NghJ ,tUf;F vJjhd; re;Njh\j;ijj; jUk; vd;W Mj;jpuk; nghq;fp te;jJz;L. ehl;fs; nry;y nry;y vy;yhNk gofpg; Ngha;tpl;lJ. gbg;Ng Kbe;J Ntiy fpilj;;J rptfq;ifapy; ,Ue;jNghJ mg;ghtpw;F Njrpa ey;yhrphpaH tpUJ fpilj;jpUf;fpwJ vd;W re;Njh\khd nra;jp te;jTld; mg;gh mjidAk; ,d;Nyz;l; nyl;lhpd; kbg;Gg; ghfj;jpd; cl;Gwk; EZf;fp vOjpapUe;jhH mg;ghit vl;bg;ghuhl;lyhk; vd;W epidj;J filrpaha; ntz;gh vOjp tho;j;J klyha; mDg;gp itj;Njd;.

‘….fbjk; fpilj;jJ. tq;fpapy; Ntiy ghHj;Jf; nfhz;L ntz;gh vOJtjw;nfy;yhk; Neuk; fpilf;fpwjh> ghl;L vOJk; Mirapy; vijahtJ Nahrpj;Jf; nfhz;L> fTz;lhpy; gzk; gl;Lthlh nra;Ak; Ntisapy; ahUf;Fk; jtWjyha; $Ljy; gzj;ijf; nfhLj;Jtpl;L Nyhy; glhNj! ntz;ghtpd; <="" span="">

mg;ghtpd; fbjj;ijg; gbj;jTld; mlf;f Kbahj rphpg;Gjhd; vdf;Fs; te;jJ

mf;fhtpw;F Ntiy fpilj;J jpUr;rp nrd;wNghJ mts; Foe;ijfisf; ftdpg;gjw;fhf mg;ghTk;> mk;khTk; jpUr;rp nrd;wtHfs; mq;NfNa nrl;byhfp tpl;lhHfs;. vdf;Fj; jpUkzkhfp Foe;ijfs; gpwe;j gpd;Gk; $l mg;ghtpd; fbjq;fspy; mwpTiuf;Fg; gQ;rkpy;iy.

“…ntapy; Neuq;fspy; mjpfk; Cu; Rw;whNj! Nfhil ntg;gj;ijj; jzpf;f Fsph;ghdq;fisj; jtph;j;J Nkhh;> ,sePH kl;LNk Fb!. NjtpiaAk; Foe;ijfisAk; jdpNa tpl;Ltpl;L rq;f NtiyfSf;fhf mbf;fb ntspA+H nry;tijj; jtpHf;fTk;. Kjypy; FLk;gj;ijf; ftdpf;f Ntz;Lk;. mjw;Fg;gpwF jhd; ehL. ehk; jpUe;jpdhNy ehL jpUe;Jk;. ,t;tsT ehl;fs; miye;jJ NghJk.! cdJ rq;fNkh> my;yJ mJ rhHe;jpUf;Fk; murpay; ,af;fNkh xU ehSk; Ml;rpf;F tu ,ayhJ. ,e;j Njrj;ij ahuhYk; jpUj;j KbahJ.

,;d;Nyz;l; nyl;lhpd; rfy%iyfspYk; ,ilntspapd;wp mg;gh vOjpj; js;sp ,Ug;ghH.jpUr;rpapy; mbf;Fk; ntapy;> fhw;W> kio gw;wp fLikahd tpiythrp gw;wp tpyhthhpahf vOJthH. Xa;Tngw;w gpd;G fbjk; vOJtJ vd;gJ mg;ghtpw;F Rthrpg;gijg; Nghy. mg;ghtpd; vOj;Jf;fs; $l;nlOj;Jf;fsha; ePz;L ePz;L caukhd fk;gp tbtj;jpy; ,Uf;Fk;. mofhdJ vd;W nrhy;y Kbahtpl;lhYk; mjpy; nfhQ;rk; trPfuk; ,Uf;Fk;. mg;ghtpd; ez;gHfs; rpyiur; re;jpf;Fk;NghJ mg;gh nyl;lH Nghl;Lf;fpl;Nl ,Uf;fhq;f.. ehd;jhd; gjpy; Nghlhk ,Uf;Nfd;. jpUr;rpapy vd;d epytuk;D Ngg;gh;y$lg; gbf;f Ntz;lhk;! cq;fg;gh nyl;liug; gbr;rhg; NghJk;! xNu xU Ngh];l; fhHLy cyfr; nra;jpNa nrhy;ypUthug;gh…” vd;W Re;jNur ma;aH rphpaha; rphpg;ghH.

,J Nghd;w rkaq;fspy; mg;ghtpw;F fbjk; vOjpapUf;fpNwd;. Ngh];l; fhh;by; tsts ntd;W vOjpj; js;shjPHfs;. nghb vOj;Jf;fis tajhdtHfs; thrpf;f ,ayhJ.

Mdhy; mg;gh vijAk; nghUl;gLj;jpaJ ,y;iy. mtH vOjpf; nfhz;Nl jhdl ,Ue;jhH.

nrd;w tUl Nfhil tpLKiwapy; mg;ghTk; mk;khTk; vd; tPl;bw;F te;jpUe;jhHfs;. xU thuk; fope;J eilngw ,Uf;Fk; rq;ff;$l;lj;jpw;F cWg;gpdHfis tur;nrhy;yp nry;Nghd; %ykhfj; jfty; nrhy;ypf; nfhz;bUe;Njd;. nra;jpj; jhis gbj;Jf;nfhz;bUe;j mg;gh epkpHe;J ghHj;Jf; $wpdhH.$l;lk; vd;why; fbjk; %ykh Kiwahj; njhpag;gLj;JtJjhd; rhp. ,;g;gb Nghd;%yk; njhpag;gLj;JtJ ey;yhth ,Uf;F?.’ “,J fk;A+l;lH Afk;gh! jfty;fis clDf;Fld; nrhy;yPuZk;! cq;fis khjphp xt;nthUj;jUf;Fk; Ngh];l; fhHLy vOjpg; Nghl;Ltpl;L ,Uf;f KbAkh mJf;F NeuKk; ,y;y nry;Nghd;y Misg;gpbr;R jftiyr; nrhy;ypahr;Rd;dh Ntiy rPf;fpuk; KbQ;rpUk;…”vd;Nwd;. mg;ghit klf;fp tpl;l ngUkpjj;jpd; ntspg;ghlha; mJ ntspg;gl;lJ mg;gh rphpj;jhH.

Nghlh Kl;lhs;! cdJ Nehf;fk; jftiyr; nrhy;tjhf ,Ue;jhYk; mbg;gilahd Nehf;fk; $l;lj;jpw;F mth;fis tuitg;gJjhNd? eP nrhd;d $l;lk; eilngWk; ,lk;> Njjp> nghUs; vy;yhk; Nghd; NgRk;NghJ fhw;NwhL Ngha;tpLk;. cd; nry;Nghidj; J}f;fp xlg;gpNy NghL!. fbjk; jhkjhfg; NghdhYk; xU kdpjid jdpg;gl;l Kiwapy; mq;fPfhpj;J mtiu miof;fpwJ. Nki[apy; fplf;Fk; me;j fhHL NghFk; NghJk;; tUk;NghJk; eilngw ,Uf;Fk; epfo;r;rpia Qhgfg;gLj;jpf;fpl;Nl ,Uf;Fk;. kD\Ndhl ,jaj;NjhL NgRk;. mJ Vw;gLj;Jk; czHit cd;Ndh; nry;Nghd; xU ehSk; Vw;gLj;jhJ. rq;fj;jpd; nrayhsH nkdf;nfl;L cl;fhHe;J ek; xt;nthUtUf;Fk; vOjpapUf;fpwhH vd;w epidg;ig mJ cUthf;Fk;. $l;lj;jpy; f;zbg;gh fye;J nfhs;sZk;fpw czHit Vw;gLj;Jk;. tuhtpl;lhy; $l fbjk; Nghl;bUe;Jk; nry;y Kbatpy;iyNaq;fw Fw;wTzHit Vw;gLj;Jk;. fbjj;jpd; kfpik cdf;F vq;Nflh njhpag;NghfpwJ?

mg;gh Nky;%r;R thq;fg; Ngrptpl;L tuhz;lh gf;fk; efHe;J nrd;whH. Kjd;Kiwahf fbjj;ijg; gw;wpa mg;ghtpd; tpsf;fk; vdf;Fsl ngUk; mjpHit Vw;gLj;jpaJ. mg;gh nrhy;ypaJ eilKiwapy; vt;tsT cz;ik vd;gijf; fhyk; vdf;F czHj;jpaJ.

fle;j ,uz;L Mz;Lfshf rHf;fiu tpahjpahy; gPbf;fg;gl;l mg;ghthy; Kd;G Nghyf; fbjk; vOj Kbatpy;iy. jdJ ehd;F gps;isfSf;Fk; fbjk; vOJtij xU jtkhff; nfhz;bUe;j mg;gh> ,g;nghOnjy;yhk; ,uz;L my;yJ %d;W thuq;fSf;F xUKiw kl;LNk fbjk; vOJfpwhH. fbjq;fs; tof;fk;Nghy md;Gepiwr;nry;td;vd Muk;gpj;J rHf;fiu tpahjpf;F mNyhgjp> N`hkpNahgjp> rpj;j> MAHNtj kUe;J vd;gijnay;yhk; tpthjpj;J ,Wjpapy; ePz;lJ}u eilg;gapw;rpNa rpwe;j kUe;J vd;gjpy; KbAk;. kuGtopg;gl;l tpahjp vd;gjhy; ePAk; rw;Wf; ftdkhf ,Ue;J tu Ntz;Lk;. KjypNyNa ,ijj;js;spg; NghLtjw;fhd topKiwfisf; ifahsNtz;Lk; vd tpahjp Fwpj;J vr;rhpj;J vOJthH. mg;ghitg; Nghy rPuhd tho;f;if Kiwapidg; gpd;gw;w KbAkh vd;gJ Nfs;tpf;FwpahfNt cs;sJ.

rhH!

rj;jk;Nfl;L tpopj;Njd;. gf;fj;J tPl;Lf;fhuH gdpaDk; Yq;fpAkha; Nfl;il;j jpwe;jgb cs;Ns te;jhH.

rhH! thq;f. vd;wgbNa vOe;Nd;.

ey;y J}f;fk; NghyBr;rH ,d;dKk; tuypah?

Mkh! ,d;idf;F ];$y;y Vnjh epfo;r;rp ,Uf;F. tu Nyl;lhFk;dhq;f…” th\;Ng\dpy; Kfj;ijf; fOtpagb $wpNdd;. mg;gNt te;J vl;bg;ghHj;Njd;. ey;yh J}q;fw khjphp ,Ue;Jr;R! mg;Gwkh tuyhk;D Nghapl;Nld;. cq;f jghy; xz;Z NrHe;J vd;Ndhl jghNyhl te;jl;LJ. Ngh];l; Nkd; ftdpf;fhk Nrh;j;J vq;f tPl;Ny Nghl;bUf;fhH. ,e;jhq;f…” vd;wgbNa ePl;bdhH mtH.

iff;nfl;Lk; J}uj;jpNyNa njhpe;Jtpl;lJ. mJ mg;ghtpd; fbjk;. kdR njk;Gld; kyu Muk;gpj;jJ.

md;Gepiwr;nry;tdpy; Jtq;Fk; me;jf;fbjj;jpy; E}W mwpTiufs; ,Ue;jhYk;> ,e;j khjj;jpy; tof;fkhdJ tuhJ NrUk;nghJ vt;tsT Jauk; Vw;gLfpwJ vd;W vz;zpagb re;Njh\j;Jld; fbjj;ij thq;fpNdd;. $l;nlOj;jpy; ePz;L ePz;L caukhd fk;gp tbt vOj;Jf;fSld; ftH ,Ue;jJ.

mg;gh nyl;lH tuypNad;D ftiyNahl ,Ue;Njd;. ,g;gj;jhd; epk;kjpah ,Uf;F. nyl;liug;gbf;fhkNyNa re;Njh\j;ij mthplk; fhl;b tplZk;. Nghyj; Njhd;wpaJ.

mg;gbah rhH! Kjy;y nyl;liug;gbq;f kj;j mg;Gwkhg;Ngryhk;mtH fpsk;gp tpl;lhH.

fbjj;ijg; gphpf;f kdrpd;wp mg;gbNa itj;jpUf;f Ntz;Lk; NghypUe;jJ. mg;gh GJrhf vd;d vOjpapUf;fg;NghfpwhH? tof;fk;Nghy tUk; fbjk; jhNd?

fbjj;ijg; gphpj;Njd;. gs;sp Nehl;bypUe;J fpopf;fg;gl;bUe;j Ngg;ghpy; fbjk; ,Ue;jJ.

md;Gs;s khkhtpw;F! tzf;fk;. jq;fspd; ,uz;L fbjq;fSk; fpilj;jd. jhj;jhthy; fbjk; vOj Kbahj fhuzj;jhy; ehd; vOJfpNwd. gag;gLk;gbahfjhj;jhtpw;F cly;eyf;FiwT VJkpy;iy. ,q;F Mr;rp> mg;gh> mk;kh> rq;fhp vy;NyhUk; eyk;. mq;F mj;ij> kPdh> jpyf; vy;NyhUk; eykh? cq;fsJ buhg;l; fpilj;jJ. tpLKiwf;F vy;NyhUk; ,q;F tUtPHfs; vd vjpHghHf;fpNwd;. cq;fsJ tPl;L Kfthpia ehd; jtwhf vOjp tpLNtdh vd;gjw;fhf> mij kl;Lk; jhj;jh jd; ifahy; vOjpdhHfs;. jq;fs; fbjk; fz;L>

md;G kUkfs;>

rptfhkp.

fpopj;Jg; Nghl;l fbj ciwiaj; NjbNdd; mJ fhw;wpy; gwe;J nrd;W> thrypd; Kw;wj;jpy; fple;jJ.




Monday, June 27, 2011

இலை உதிர்வதைப்போல...

இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை நாள் என்றாலே பிள்ளைகளைப்போலவே எனது மனமும் குதூகலிக்கத்தான் செய்கிறது. எதையும் நிதானமாகச் செய்யலாம். பதட்டத்துடன் காலைச்சாப்பாட்டை அவசர அவசரமாய் சாப்பிட்டு பள்ளிக்கு ஓட வேண்டியதில்லை. இரண்டு பேருக்கும் டிபன் கேரியரில் மதியச் சாப்பாட்டை எடுத்து வைக்க வேண்டியதில்லை. காலை டிபனையே பத்து மணிக்கு நிதானமாய் சாப்பிடலாம். சாப்பிடாமல் கூட இருக்கலாம். நம் இஷ்டம் தானே? மாலையில் எதிர்வீட்டு வினோதினியுடன் ஜவுளிக்கடைக்கு போகவேண்டும். அவளுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். 'நீங்களும் வாங்கக்கா!' என்று திரும்ப திரும்ப அழுத்தியதால் வருவதற்கு ஒப்புக்கொண்டேன.; பீரோவைத் திறந்து என்ன சேலை கட்டுவது என்ற யோசனையில் மனம் அலசத் தொடங்க, கைகள் சேலைகளைப் புரட்டியபடி இருந்தன. ஊடுவாக்கில் கை எதையோ ஒரு சேலையைப்பற்றி இழுக்க, கால்களுக்கிடையே வேறு ஒரு புடவை விழுந்தது. குனிந்து பார்த்தபோது நீல வர்ணத்தில் வெள்ளைப்பூக்கள் பூத்த சேலை அம்மா கடைசியாய் கட்டியிருந்த சேலை கைகள் அந்தச் சேலையை அனிச்சையாய் தூக்கின. சேலையைப் பிரித்த போது அம்மாவின் வாசனையை உணர்ந்தேன்.

இதேபோல் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்தான் அம்மா தனது கடைசி மூச்சுக்காற்றை விட்டுவிட்டு, நீலநிறப் புடவையில் மௌனித்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். என்றுமே ஏழு மணி வரை தூங்காத அம்மா, அன்று வெகுநேரம் தூங்குவதைப் பார்த்து நான் அம்மாவை எழுப்பியபோது அம்மாவின் ஜில்லிட்ட உடம்பு கீழே சரிந்தது. அறுபது வயதில் ஏன் அம்மா என்னை விட்டுச் சென்றாய்? வரும் தைப்பொங்கல் வந்தால் அம்மா இறந்து பத்து வருஷங்கள் ! காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அம்மா இறக்கும் போது ரிஷிக்கு ஒன்பது வயதிருக்கும். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆச்சி இறந்து எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது, அழுவதற்குக்கூடத் திராணியற்று, விக்கித்துப் போய் ஒரு போர்வையில் முடங்கிக் கிடந்தான்.

அவனை அம்மா தானே வளர்த்தாள்! சிசேரியன் மூலம் அவன் பிறந்தபோது டாக்டருக்குப் பிறகு முதலில் அவனைத் தூக்கி எடுத்து உச்சி முகர்ந்தது அம்மா தான்! மூன்று வயசு வரை முழுசாய் அவனை வளர்த்தது அம்மா.. அவனைக் குளிப்பாட்டுவதில், மருந்து கொடுப்பதில், அவனோடு விளையாடுவதில், நர்சரி வகுப்பி;ற்குப் போகும்போது அவனை இடுப்பில் சுமந்தபடி தெருவில் வேடிக்கை பார்த்தபடி அழைத்துச் செல்வதில்... அம்மாவுக்கும் அவனுக்குமான பந்தம் மிகவும் இனிiமான தருணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்குப் போகும்போது ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகளை அம்மா நாய் அணைத்துப் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சியிடம் காண்பிப்பான். 'குட்டி நாயை எடுத்துக்கொடு.. அதைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும்' என்று அடம்பிடிப்பான். அம்மா அவனுக்காக எதுவுமே செய்வாள். அம்மாவின் பொறுமை எனக்குத் துளியும் கிடையாது. அம்மாவிடம் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டிருக்கிறேன். இது கூடக் கண்ணுக்குத் தெரியலையா' என்று நான் கேட்ட போதெல்லாம், அம்மா பதிலுக்கு ஏதும் கூறாமல் அமைதியாய் இருந்திருக்கிறாள். அதே மாதிரி தான் ரிஷியும் என்னிடம்கோபப்படுவான். 'என்னம்மா பாக்குறே! பக்கத்துல வச்சுக்கிட்டே தேடுறியே' என்பான். கண்ணாடியைப் போட்ட பின் தான் தெளிவாகத் தெரிகிறது உலகமே.. அம்மா கடைசியாய் படுத்த போது தலையணை அருகே மடித்து வைக்கப்பட்டிருந்த மூக்குக் கண்ணாடியை ரிஷியின் அப்பா பத்திரமாக எடுத்து சாமி போட்டோவின் கீழே வைத்திருக்கிறார். அம்மாவின் மாத்திரை டப்பாவையும் கூட விட்டு வைக்கவில்லை. டயானில் மாத்திரைகள் மீதம் முப்பதும் அப்படியே இருந்தன. கடைசிக் காலத்தில் அம்மா எங்கே சென்றாலும் சேலைகளை எடுத்து வைக்கிறாளோ இல்லையோ, மாத்திரை டப்பாவும், கண்ணாடி கூடும் ஞாபகமாய் அவளது கைப்iயில் இடம் பெற்றிருந்தன.

இப்பொழுதெல்லாம் அம்மா அடிக்கடி கனவில் வருகிறாள். கிட்டே வந்து எதுவோ சொல்ல நினைத்து பின் எதுவும் சொல்லாமல் விலகி.... பால்வெளியில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒரு கிரகத்தைப் போல பிரகாசித்தும், மினுங்கியும் செல்வது போல இருக்கும். வீட்டிலே வேலை செய்யும் பணியாளிடம் அம்மா சுவாரசியமாய் கதை கேட்டுக்கொண்டிருப்பாள். சாப்பி;ட்டு மீந்து போனதை அல்லது பழைய தின்பண்டங்களை எதையாவது வேலை செய்யும் இசக்கியம்மாளுக்குக் கொடுக்கப்போனால் அம்மா சொல்வது அடிக்கடி நினைவிற்கு வரும். 'எது கொடுத்தாலும் சாப்பிடுற நிலையில் உள்ளதையே கொடு. வேலைக்காரிதானே என்று நினைத்து ஊசிப்போன காய்கறிகளையோ, கெட்டுப்போன சாப்பாட்டையோ கொடுக்காதே! அதைவிடப் பாவம் எதுவுமில்லே...' என்று அம்மா சொல்வாள். சாப்பாடு விஷயத்தில் அம்மாவின் தாராளம் என்னை பல சமயங்களில் வியக்க வைக்கும். ஐந்து பேருக்குச் சமையல் என்றால்கூட அம்மா எட்டு பேருக்குச் சாப்பிடுவது போல செய்வாள். திடீரென்று யாராவது விருந்தாளி வந்துவிட்டால் என்ன செய்வது... என்று விளக்கம் வரும். சமயங்களில் அது உண்மையாகக் கூட ஆகிவிடும். அண்ணனின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது 'சாப்பிட்டுப் போயேன் சுப்பையா' என்று அம்மா இயல்பாகச் சொல்வது வழக்கம். அவர்களும் பெரும்பாலும் மறுப்பு சொல்வதில்லை. அம்மாவின் சாப்பாட்டு ருசியை அனுபவித்தவர்கள் அவர்கள்! கோணங்கி வீட்டிற்கு வந்தால் தாராளமாய் பத்து, பனிரெண்டு முழு உளுந்தம் தோசைகளை ஒரு பிடிபிடிப்பான். அடுத்தவர்கள் முழு ஈடுபாட்டோடு ரசித்து உண்பது அம்மாவுக்கு இயல்பிலேயே பிடித்தமானதாக இருந்தது

. இப்பொழுதும் கன்னி விநாயகர் கோவிலில் எல்ஆர்.ஈஸ்வரியின் 'தாயே கருமாரி!' பாடலைக்கேட்கும்போது எனக்கு வ.உ.சி.நகர் நினைவிற்கு வந்து விடுகிறது. மதுரையில் வ.உ.சி. நகரில் நாங்கள் குடியிருந்த காலத்தில் நானும் அம்மாவும் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போகும்போது எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்திப்பாடல்கள் எல்லாமே கேட்டு, கேட்டு மனசுக்குள் மனப்பாடம் ஆகியிருந்த காலம்!. கால அடுக்கின் எல்லைகளை இசைப்பாடல்களே நிறைத்துக் கொண்டிருக்கின்றன. தெருவில் என் வயதொத்த இளம்பெண்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் எனக்கு அம்மாவே மிகச்சிறந்த தோழி... நானும் அம்மாவும் பார்க்காத சினிமா கிடையாது. வீட்டிலிருந்து இரண்டு பர்லாங் தொலைவில் இருக்கும் சரஸ்வதி தியேட்டருக்கு இருவரும் பேசியபடியே நடந்து செல்வோம். கல்லூரியில் எனக்கு சீனியராகப் படிக்கும் உமாசங்கர் சைக்கிளிலேயே பின்னால் வருவதைக் கவனித்திருக்கிறேன். இதைக்கூட அம்மாவிடம் கூச்சமின்றிக் கூறியிருக்கிறேன். அம்மா எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்வாள். கல்லூhயில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் அம்மாவிடம் நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு மிகச்சிறந்த தோழியைப் போல அம்மா எல்லாவற்றையும் ஆர்வமாய்க் கேட்பாள். புடவை எடுக்கவோ, ஸடிக்கர் பொட்டு, வளையல், தோடு வாங்கவோ, எனக்கான பேனா, நோட்புக்ஸ் வாங்கவோ கூட நான் அம்மாவையே துணையாய் அழைத்துச் செல்வேன். என் வாழ்க்கைப்பயணத்தில் இடையில் நின்றுவிட்ட சக பயணியாகவே அம்மாவை உணர்கிறேன்.

போன வாரம் வைரஸ் காய்ச்சலில் அவதிப்பட்டபோது, ரத்தப் பரிசோதனை செய்யச்சொல்லி டாக்டர் அட்வைஸ் பண்ணினார். அப்போது வழக்கமான பரிசோதனையுடன் சாக்கரைநோய் இருக்கிறதா என்பதையும் பார்த்து இல்லையென்பதை உறுதி செய்து கொண்டேன். அம்மாவிற்கு மட்டும் எப்படி வந்தது இந்த சர்க்கரை வியாதி.. கடைசி இரண்டு வருஷங்கள் மாத்திரை டப்பாவுடன் அம்மா இருந்த நினைவு வந்தது. வியாதி வந்து விட்டதே என்று அம்மா ரொம்ப வருத்தப்பட்டதும் இல்லை. அதைக்கூட எல்லாவற்றையும்போல இயல்பாக எடுத்துக்கொண்டாள்.

அம்மாவின் உலகம் ரொம்ப சிறியது. அப்பா, இரண்டு அண்ணன்கள், நான் மட்டுமே அந்த உலகில் உண்டு. திருமணத்திற்குப் பிறகு மருமகன், மருமகள்கள், பேரன், பேத்திகள் என்ற உறவுகளைத் தாண்டி வேறு யாரும் கிடையாது. தனது சொந்தங்களைக் கடந்து வெகு தூரம் வந்து விட்டவள். ஆனால் எல்லா மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்தவள். மனிதர்களை உணர்வுபூர்வமாக உணர்ந்தவள். சர்க்கரை வியாதியை ஒரு பொருட்டாகவே அம்மா எடுத்துக் கொள்ளாமல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். 'எம்மா! பேசாம படுத்திறேன்... நான் பாத்துக்க மாட்டேனா?' என்பேன்.'நீ ஸ்கூல் விட்டு இப்பத்தான் வந்திருக்கே... கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு' என்றபடி அம்மா காப்பியைக் கலப்பாள். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் அம்மாவின் மணமான காப்பியைக் குடிக்க நாக்கு பரபரக்கும். விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால், மனம்தான் எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது இருந்த ஜாலியான உணர்வு மனசைத் தொற்றிக் கொள்கிறது. காலையில் சீக்கிரமாய் எழுந்து காப்பி போட வேண்டாம்! வேலைக்காரிக்கு பாத்திரங்களை அவசர அவசரமாய் எடுத்துப்போட வேண்டாம.! எல்லாவற்றிற்கும் மேலாக சமையல் பண்ண வேண்டாம். எல்லாத்துக்கும் அம்மா இருக்கிறாள்... மனம் நிம்மதிப் பெருமூச்சில்.. ஆனந்த நித்திரை கண்களைக் கட்டிப்போடும்... எவ்வளவு பாதுகாப்பாய் உணர்ந்திருக்கிறேன்.

அந்த ஞாயிற்றுக்கிழமையும் அப்படித்தானே தூங்கினேன்? முதல்நாள் இரவு 11மணிக்கு அம்மாதானே எல்லோருக்கும் தோசை சுட்டுக்கொடுத்தாள். நாளை மதியத்துக்குமேல் ஊருக்குக் கிளம்பணும்' என்று படுக்குமுன்பு என்னிடம் சொல்லிவிட்டுப் படுத்தாள். உலகத்தை விட்டே கிளம்பப்போவது யாருக்குத் தெரியும்? என்றுமே ஏழுமணி வரை தூங்காத அம்மா அன்று தூங்கினாள். யார் எதிர்பார்த்தார்கள் இதை? அப்பா விக்கித்துப் போனார். வெளியூர் போயிருந்த அண்ணன் உடல் பதைபதைக்க ஓடிவந்தான். அம்மா ஆழ்நத நித்திரையில் உறங்குவது போலத் தான் இருந்தாள். முகம் எலுமிச்சை நிறத்தில் கலங்கமற்று இருந்தது. யார் யாரோ வந்தார்கள். அம்மாவுக்கு நல்ல சாவு தான். படுக்கையில் கிடந்து சங்கடப்படாமல்... கொடுத்து வச்ச மகராசிதான்... யாரோ ஒரு வயதானவர் அண்ணனிடம் கூறிக்கொண்டிருந்தார். மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பத்து நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து அதன்பின் எது நடந்தாலும் மனம் அதனைப் பக்குவமாய் ஏற்றிpருக்கும்.திடுதிப்பென்று நிர்க்கதியாய் விட்டுப்போனாயே அம்மா.

.ஒரு மாதத்திற்கு முன்பு அம்மா பேச்சுவாக்கில் சொன்னாள். 'மகள் மருமக எல்லோரும் வேலைக்குப் போயிட்டு இருக்கீக... படுக்கையில மட்டும் விழுந்துறக்கூடாது மீனா... யாரையும் தொந்தரவு படுத்தாம போய்ச்சேரணும்...பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்ற மாதிரி உதிர்ந்து போகணும்.' சொன்னது போலவே, இயல்பாய் உதிர்ந்து விட்டாள் அம்மா...வாழ்க்கையில் அம்மா ஜெயித்துவிட்டது போலவே தோன்றுகிறது. அவளது ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒரு தெளிந்த நீரோடை போல சென்றுவிட்டது. சேலையைக் கட்டிவிட்டு கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவின் சாயல் எனக்குள் படிமமாய் உறைந்தது. நீ எங்கேயும் போகவில்லை அம்மா! எனக்குள்தான் இருக்கிறாய்!.

Sunday, June 26, 2011

ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்


திருச்செந்தூர் பாசஞ்சர் வண்டி வரும் நேரம் நெருங்கிவிட்டது.

செய்துங்கநல்லூர் ஸ்டேசன் மாஸ்டரிடம் எண்ணை வாங்கிக் கொண்டு சிக்னல் போட்டுவிட்டு கேபிள் ரூ;மைவிட்டு வெளியே வந்து கிழக்கே திரும்பிப் பார்த்தார் சாமிக்கண்ணு. எந்த நேரமும் ரயில்வே கேட் அடைக்கப்படும் என்ற அவசரத்தில் மோட்டார் சைக்கிள்களும் ;கார்களும் ஒலியெழுப்பியபடி வேகவேகமாய் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தன. காலை எட்டு முப்பது மணி ரொம்பவும் பரபரப்பான நேரம். ; கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் மாணவிகளும்; குழந்தைகளைச் சுமந்து செல்லும் பெற்றோர்களும் அரை டவுசர் அணிந்த சாமிக்கண்ணுவின் உருவம் கண்ணில்படுமுன் தண்டவாளத்தைக் கடந்து விடவேண்டும் என்ற படபடப்புடன் கரும்புகைகளைக் கக்கியபடி தலைதெறிக்க வாகனங்களை ஓட்டிச்சென்றனர். சாமிக்கண்ணு மனசிற்குள் சிரித்துக்கொண்டார்.

'போங்க... போங்க.. பதட்டப்படாம போங்க...'

யோசித்தபடி மெதுவாக ரயில்வே கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் தலையைப் பார்த்ததும் நூறடி தூரத்தில் வந்து கொண்டிருந்த பள்ளி வாகனங்கள் நீண்ட ஹார்ன் ஒலியை எழுப்பியபடி வேகமாக வரத் துவங்கின. தண்டவாளத்தைத் தாண்டிவிட்ட திருப்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சாமிக்கண்ணுவைப் பார்த்து 'தேங்க்ஸ் அண்ணாச்சி' என்றபடியே கையை உயர்த்திப் புன்னகைத்தவாறு சென்றனர். இது போன்ற சமயங்களில் சாமிக்கண்ணுவிற்கு சிரிப்புத்தான் வரும். தண்டவாளத்தைக் கடந்து வி;ட்டால் களிப்புடன் செல்வதும்ரூபவ் மாட்டிக் கொண்டால் அதுக்குள் இவ்வளவு அவசரமா என்பது போல முறைத்துப் பார்ப்பதுமான முகங்களைப் பார்த்துப் பழகிப்போய் விட்டது.

கேட் அருகே நின்றுகொண்டு அடைப்பதற்குத் தயாரான பாவனையில் நின்று கொண்டிருந்தார். வெளிர் பச்சை நிற மாருதி காரை ஓட்டி வரும் டாக்டரம்மா இன்று சீக்கிரமாய் கடந்து சென்றது ஆச்சரியம்தான். பழைய டுவீலர் வண்டியை புகை கக்கியபடி ஓட்டிவரும கொண்டை போட்ட டீச்சர் கூட இன்றைக்கு நேரத்தில் கடந்து சென்றது அதிசயம்தான். இவர்களெல்லாம் பெரும்பாலும் கேட் அடைப்பில் மாட்டிக் கொண்டு மனசிற்குள் முணுமுணுத்தவாறு காலைத் தரையில் தேய்த்துக்கொண்டு தவியாய் தவித்துக் கொண்டிருப்பவர்கள். சின்னப்பாப்பாவை இன்னமும் காணவில்லை. ஒரு வேளை முன்னதாகப் போயிருக்குமோ? இன்றைக்கு எப்படியும் பார்த்தாகணுமே என்ற கவலை சாமிக்கண்ணுவின் முகத்தில் தொற்றிக் கொள்ள கண்ணுக்கெட்டிய தூரம் வரை சைக்கிளில் வரும் சின்னப்பாப்பாவைத் தேடினார். விஷயத்தை நேற்றே சொல்லியிருக்கலாமோ என்று பட்டது. இன்றைக்குச் சொல்வது தான் சரி என்று மனசிற்குள் தோன்றியதால் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டார் சாமிக்கண்ணு.

கதவருகே நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருக்கும் சாமிக்கண்ணுவை வியப்புடன் பார்த்தவாறே கடந்து சென்றனர் பள்ளி மாணவர்கள். ஒரு வேளை இன்றைக்கு லீவு போட்டுவிட்டதோ? மனம் சஞ்சலமடைந்தது அவருக்கு.

மூன்று வருடங்களுக்கு முன்பு விருதுநகர் பக்கத்திலிருந்து இங்கே மாற்றலாகி வந்த சாமிக்கண்ணுவிற்கு பாளையங்கோட்டை நகரத்திற்குள் இருக்கும் இந்த ரயில்வே கேட் ரொம்பவும் பிஸியான பகுதி என்பது வந்தபின்தான் தெரிந்தது. அங்கேயெல்லாம் ரயில் வரும்போது கேட் அடைத்தால் ஒரு சில மாட்டுவண்டிகள் நிற்கும். சமயங்களில் மணல் அடிக்கும் லாரிகள்; டிராக்டர்கள் நிற்பதுண்டு. வெயில் சுட்டெரிக்கும் அந்த கந்தக பூமியில் நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி; கருவேல மரச் செடியின் கீழே உட்கார்ந்து வெள்ளரிப் பிஞ்சுகளை தட்டில் வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள் சிறுவர்களும் சிறுமிகளும். ரயில்வே கேட்டை சாமிக்கண்ணு மூட வரும்போது; அவர்கள் மனசுக்குள் குதூகலம் பொங்க வெள்ளரிப்பிஞ்சு தட்டுக்களை கையில் எடுத்துக்கொண்டு தயாராக இருப்பார்கள். செம்மண் புழுதியைக் கிளப்பியபடி வந்து நிற்கும் லாரிக்காரர்களிடம் ஓடோடிச் செல்வார்கள்.

'அண்ணே! வெள்ளரிப்பிஞ்சுண்ணே! தட்டு மூணு p;வான்னேன்...ஒரு தட்டு வாங்கிக்கங்கண்ணே!'

காலையில் பதினோரு மணிக்கும் மதியம் இரண்டு மணிக்கும் வேப்பிலைப்பட்டிக்குச் செல்லும் ஜெயவிலாஸ் பஸ்ஸில்தான் சிறுவர்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். பயணிகளை புளி மூட்டையாய் அடைத்து வரும் ஜெயவிலாஸ் வண்டி மூடிய ரயில்வே கேட் அருகே நின்றவுடன் வண்டியில் உள்ள பெரும்பாலோர் புழுக்கம் தாளாமல் கீழே இறங்கி விடுவதுண்டு. அந்த பத்து நிமிடங்கள்தான் சிறுவர்களின் இயங்கும் நேரம்.'அண்ணே! ஒரு தட்டு மூணு ரூபா! பிஞ்சுக்காயிண்ணே!'

'எக்கா! ஒரு தட்டு வாங்கிக்குங்கக்கா! மூணு ரூ;வாதாங்க்கா'

பஸ்ஸின் பக்கவாட்டில் சிறுமிகள் விற்றுக்கொண்டிருக்கும்போது பஸ்ஸிற்குள் லாவகமாய் ஏறும் சிறுவர்கள் தட்டுடன் கூட்டத்தில் மூண்டியடித்துச் சென்று சில நிமிடங்களில் விற்றுவிடுவார்கள். இடையன்குளம் மாரிச்சாமியின் மகன் தவசி வெள்ளரிப்பிஞ்சுகளை விற்பதில்லை. பெரிய பெரிய வெள்ளரிக்காய்களின் தோலைப் பக்குவமாகச்சீவி கத்தியால் நான்காய் பிளந்து அதில் மிளகாய்ப்பொடிரூபவ் உப்புப்பொடி தூவி; ஒரு காய் இரண்டு ரூ;பாய் என்று விற்றுவிடுவான்.

மாரிச்சாமி சாத்தூர் பஸ்-ஸ்டாண்டில் வியாபாரம் பார்ப்பதால் அந்த தொழில்நுட்பத்தை தவசி அங்கிருந்து இறக்குமதி செய்துவிட்டான். மற்ற சிறுவர்கள் நான்கு தட்டுகள் விற்கும் நேரத்தில் தவசி பத்து பதினைந்து ரூயஅp;பாய்க்கு வியாபாரம் பார்த்துவிடுவான்.

'ஏலேய் தவசி! நீ பொழைச்சுக்குவேலே...' சாமிக்கண்ணு சிரித்துக் கொண்டே கூறுவார். மற்றவர்களுக்கும் தவசியைப் போல விற்க முடியலையேங்கற ஆதங்கம் மனசிற்குள் இருக்கும். அவர்கள் தோட்டத்தில் விளைகிற பிஞ்சுகளை அன்றைக்கே விற்றால்தான் நாலுகாசு தேறும். காயாக வரும்வரை காத்திருக்க விடாது வயிறு. கோணிப்பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து விடுவார்கள்.

கேட்; மூடி திறந்து ஜெயவிலாஸ் வண்டி சென்றபின்; மயான அமைதி தான் நிலவும். அதன்பிறகு மாட்டுவண்டிக்காரர்கள்; லாரி டிரைவர்கள் வழிப்போக்கர்கள் யாரேனும் வாங்கினால்தான் உண்டு. மற்ற நேரங்களில் சாமிக்கண்ணு தான் அவர்களுக்கு பொழுது போக்கு நண்பன்.

'ஏட்டி மாரிக்கனி! நீ போன வருஷம் வரைக்கும் பள்ளிக்கூடம் போனீல்ல...இப்ப ஏன் போகலை...'

'ம் ... போகலை அவ்வளதான்...' மாரிக்கனி இழுத்தாள்..

'அதாண்டீ கேக்கேன்...ஏன் போகலை...நல்லா படிப்பீல்லா... இதுகளோட சேர்ந்தா நீ உருப்பட்டால தான்'

பீடியை இழுத்துக் கொண்டே சாமிக்கண்ணு; மாரிக்கனியின் தட்டில் இருந்து ஒரு பிஞ்சை எடுத்து டவுசரில் துடைத்துக்கொண்டார்.

'எங்கம்மாதான் படிச்சது போதும்னுட்டா! மாரிக்கனி சலிப்புடன் கூறினாள். :ஆமா..படிச்சு பெரிய்ய டீச்சர் வேலைக்குப் போகப் போறாளாக்கும்..' பேச்சியும்; காளியும் கிண்டல் செய்தார்கள்.

'அடச்சீ மூதிகளா படிக்காட்டியும் வாய்க்கு ஒண்ணும் கொறைச்சலில்லை.. போன வருஷம் பரீச்சையிலே அறுபது எழுபதுன்னு மார்க்கெல்லாம் வாங்கிருந்தீல்ல...இங்கிலீஸ்ல கூட பாஸாயிட்டயே....இதுகள மாதிரி படிப்பு மண்டையிலே ஏறலைன்னா எக்கேடும் கெட்டுத் தொலைன்றலாம். வெள்ளரிப் பிஞ்சைக் கடித்துக்கொண்டே சொன்னார் சாமிக்கண்ணு.

'தாத்தா! ரயில்வருது! ரயில்வருது! ரயில்வருது! ஓடு! ஓடு!' இசக்கியம்மாள் பயங்காட்டினாள்.

'அட எடுபட்ட சிறுக்கி! வந்தேன்னா கைய முறிச்சுப்புடுவேன்...ஆமா..' சாமிக்கண்ணு போலியாய் விரட்டுவார்.

அவரது திருநெல்வேலி பேச்சு பிள்ளைகளுக்கு ரொம்பப்பிடிக்கும். ஊருக்குப் போகும்போது மொத்தமாய் வெள்ளரிப் பிஞ்சுகள் வாங்கிக் கொண்டு போவார். பிள்ளைகள் ஆசையாய்க கேட்டதால் ஒருமுறை திருநெல்வேலி அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். 'இருட்டுக்கடை அல்வாடா' என்று பாடியவாறே தவசி அல்வாவை ஒருகை பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

'ஏலே டவுசர் அவுந்தூராம பாத்து ஆடுல்லே! அல்வா எப்டியிருக்கு?

விரலை நக்கியபடி' நல்லாத்தேன் இருக்கு...எங்க ஊரு கருப்பட்டி மிட்டாசு மாதிரியில்லே...' என்றான்.

சாமிக்கண்ணு எழுந்தவுடன் ஓட்டம் பிடிப்பான் தவசி.

சொந்த ஊருக்கு மாற்றலாகி வரும்போது பிள்ளைகளைப் பிரியமனசில்லாமல் தான் வந்தார் சாமிக்கண்ணு. கிழிந்த பாவாடையை இழுத்துக்கட்டிக்கொண்டு வெள்ளரிப்பிஞ்சுத் தட்டுகளோடு அலையும் மாரிக்கனியின் நினைவு அவ்வப்போது அவருக்கு வருவதுண்டு.

கேட்டை மூடும்போது இருபுறமும் பத்து பதினைந்து பேருக்கு மேலிருக்காது. 'சின்னப்பாப்பாவிற்கு உடம்புக்கு ஏதும் முடியலையோ என்னவோ' மனம் வெறுமையாய் தவிக்க கேபிள் ரூமை நோக்கி நடந்தார் சாமிக்கண்ணு. தினமும் நூற்றுக்கணக்கான ஆண்களும்; பெண்களும் பள்ளி மாணவர்களும் இந்தப்பகுதியைக் கடந்து சென்றாலும் சின்னப்பாப்பா அறிமுகமானது சுவாரசியமான சம்பவத்தில்தான்.

மாற்றலாகி வந்த புதிதில் ஒவ்வொரு முறை கேட்டை மூடித் திறக்கும்போதும் பெரும்பிரச்னையாகத் தான் இருந்தது அவருக்கு. ஒரு கேட்டை மூடிவிட்டு அடுத்த கேட்டை மூடும் போது உள்ளே வந்தவர்கள் தங்களை மட்டும் போகவிடுமாறு கெஞ்சினார்கள். சிலர் கோபப்பட்டார்கள். ரயில் சென்றவுடன் கேட்டைத் திறப்பதற்குள் தங்களது வாகனங்களைக் கிளப்பி ஒருவரையொருவர் முந்திக் கொண்டும்உரசிக்கொண்டும் செல்வோர்ரூபவ் எதிர்த்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் செல்லாமல் எதிரெதிரே முட்டிக்கொண்டு ஹார்ன் ஒலிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வார்கள். சாமிக்கண்ணுவிற்கு பழியாய்க் கோபம் வரும்.

'இவங்கெல்லாம் படிச்ச மனுசங்கதானா? எத்தனை முறை கூறினாலும் யார் காதிலும் எதுவும் ஏறவில்லை. போக்குவரத்து போலீஸ்காரரிடம் ஒருமுறை முறையிட்டு இரண்டு வாரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். பின் அவரும் வருவதில்லை. போன வருடத்தின் கோடைகாலத்தில் என்று ஞாபகம். இப்படித் தான் கேட்டை மூடிவிட்டு கேபிள் ரூயஅp;ம் பக்கம் பச்சைக் கொடியுடன் நின்று கொண்டிருந்தபோது பொறுக்கமாட்டாத அவசரக்குடுக்கைகள் சிலர் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தனர். அவசரம் அவசரம். எல்லோருக்குமே அவசரம் தான்! அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்ப வேண்டியதுதானே! நூறடி தூரத்தில் தண்டவாள வளைவில் ரயில் வந்து கொண்டிருக்கும்போதுதான்ரூபவ் வெள்ளைச் சீரூடை அணிந்த அந்தச் சிறுமி தனது சைக்கிளை சிரமமப்பட்டுத் தூக்கிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருப்பதை சாமிக்கண்ணு கவனித்தார். ஒரு நொடியில் வெலவெலத்துப் போனவர் விருவிருவென்று ஓடிவந்து 'ஏ பாப்பா! நில்லு.. நில்லுங்கறேன்ல..என்ன அவசரம்? வீ;ட்லே சொல்லிட்டு வந்திட்டியா? கேட்டுக்கொண்டிருக்கும்போதே ரயில் மிகுந்த இரைச்சலுடன் இருவரையும் கடந்து சென்றது.

படபடத்துப்போன சிறுமிக்கு பேச வாய்வரவில்லை. நடுங்கியபடியே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். கேட்டின் இருபுறமும் வாகனங்களில் நின்றவர்கள் எதுபற்றியும் கவலையின்றி முதல் கியரில் 'டுர்....டுர்'.... என்று வாகனங்களைக் கிளப்பிக்கொண்டு சாமிக்கண்ணுவிற்காக பொறுமையிழந்து காத்துக்கொண்டிருந்தார்கள்.

கதவைத் திறந்து விட்டுப் பார்க்கும் முன்பே சிறுமி சைக்கிளில் சிட்டாய்ப் பறந்து விட்டாள். அன்று மாலை வெயில் சாயும் நேரத்தில் நுங்கு விற்றுக் கொண்டிருந்த பழனியுடன் சாமிக்கண்ணு பேசிக் கொண்டிருந்தபோது காலையில் பார்த்த சிறுமி சைக்கிளை உருட்டியபடி தன்னைப்பார்த்து வருவதை உணர்ந்தார். பத்து பதினோறு வயதிருக்கும். செழிப்பான வீ;ட்டுப் பிள்ளை என்பது முகத் தோற்றத்திலேயே தெரிந்தது.

'தாத்தா! ரொம்ப ஸாரி! காலைல ஸ்கூலுக்கு நேரமாச்சுங்கற அவசரத்தில வேகமா க்ராஸ் பண்ணினேன்! ட்ரெயின் வர்றதக்கவனிக்கல... உங்ககிட்டே சொல்லாம போயிட்டேன்.'
படபடவென்று பேசினாள் அவள்.

'பாப்பா! கேட் அடைச்சுட்டானா க்ராஸ் பண்ணவே கூடாது...அஞ்சு நிமிஷம் முன்னால கௌம்ப வேண்டியதானே?

'காலைல வீட்டிலே சொல்லிட்டுதான் வந்தேன். நீங்க எதுக்குக் கேட்டீங்க?'

சிறுமி கேட்டபோது சாமிக்கண்ணுவிற்கு 'ஏன் அப்படிச் சொன்னோம்னு' போயிட்டுது ஆத்திரத்தில் குழந்தைகள் கிட்டேகூட புத்தி கெட்டுதான் பேசித்தொலைச்சிருதோம்னு பட்டது அவருக்கு.

'உம் பேரு என்னம்மா? சைக்கிள் ஹேன்ட்பாரைப்பிடித்தபடி சாமிக்கண்ணு கேட்டார்.

'சௌம்யா சிக்ஸ்த் படிக்கேன். செயின்ட் மேரீஸ் ஸ்கூல்ல'

சௌம்யா வாய்க்குள் நுழைய மறுத்தது.

'இருக்கட்டும் நல்ல பேருதான்.. வீடு எங்கன இருக்கு;'
தியாகராசநகர்த் தெருவைச் சொன்னாள்.

இப்படி அறிமுகமான சின்னபாப்பா (பெயர் வாய்க்குள் நுழையாததால் சாமிக்கண்ணு சூட்டிய பெயர்) இடையிடையே சாமிக் கண்ணுவைப் பார்த்துப் பேசி விட்டுச் செல்லும் அளவிற்கு கலகலப்பாய் பழகியிருந்தாள்.

பெண்குழந்தைகளின் மீது சாமிக்கண்ணுவிற்கு தனி பிரியம் உண்டு. அவருக்கு இருப்பது மூன்றும் ஆம்பிளைப்பிள்ளைங்கதான். நாலாவதாய்ப் பிறந்த பார்வதி மீது பாசம் அதிகம் அவருக்கு. பத்தாம் வகுப்பிலே பெயிலாகிப் போனதால் அரளிவிதையை அரைத்துக்குடித்து அந்த இளம்பிஞ்சு இறந்து போனபோது நொறுங்கிப் போனார் சாமிக்கண்ணு. யாரைக்குற்றம் சொல்ல என்று தெரியாமல் மனசுக்குள்ளேயே புழுங்கி கரைந்து போனார். வெறித்து நோக்கிய கண்களுடன் உடல் விரைத்துக் கிடந்த அந்த இளந்தளிரின் உருவம் திடீரென்று கனவில் தோன்றும்போது தூக்கம் கலைந்து எழுந்து உட்காருவார். தூக்கமின்றி பல இரவுகள் இடைவிடாத இருமலையும் மீறிப் பீடிகளை புகைத்தவாறு நட்சத்திரங்கள் இல்லாத இருள்வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.

வேப்பிலைப்பட்டியில் வெள்ளரிக்காய் விற்கும் மாரிக்கனியைப் பார்க்கும் போது பார்வதி ஞாபகம் வரும். இவளை மாதிர்pத்தான் நல்ல கறுப்பு பளபளவென்று மின்னும் கண்கள் கூட அவஜாடைதான். பெருமூச்செறிவார் சாமிக்கண்ணு. காலம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து. இந்தப் பத்து வருஷங்களில் அவரை ஒரு மாதிரி தேற்றியிருந்தது.

'என்ன வேய்! ஒரு மாதிரி நெல கொள்ளாம இருக்கீரு? கடைசி நாளுங்கற டென்சன்ல இருக்கீரா?'நுங்கு சீவிக் கொண்டிருந்த பழனிரூபவ் தலைப்பாகையை அவிழ்த்து மேல் கை காலெல்லாம் துடைத்துக் கொண்டே கேட்டார். ஆமா இன்னியோட கடைசீ தான்! நாளைலயிருந்து குப்புறப்படுத்து தூங்கவேண்டியதுதான்! அதுவுந்தான் என்ன பொழப்பு...'பீடியைப் பற்றவைத்துக்கொண்டார் சாமிக்கண்ணு.'காலைல ரொம்ப அவசரப்படுத்தினீரு... இள நொங்கா பத்தை எடுத்துப் பார்சல் பண்ணுன்னு... ஓலைல சுத்தி வச்சிருக்கேன்...யாருக்கு பிள்ளைகளுக்கா...?'பழனி தான் கேட்டார்..'நம்ம பிள்ளைக என்னைக்குச் சாப்பிட்டதுக....நம்மள எதிர்பார்த்து நிக்கற காலமெல்லாம் போயாச்சு....'பெருமூச்சுடன் புகையை விட்டார். சாமிக்கண்ணு. பார்வதிக்கு நுங்கு பிடிக்கும். வெறும் நுங்கைச் சாப்பிடுவதைவிட மடித்துக் கொடுத்த பனை ஓலையில் ஆழாக்கு பகநீரை ஊற்றி அதிலே நுங்கைப்பிய்த்துப் போட்டால் ஒரு சொட்டுக் கீழே விழாமல் உறிஞ்சுக் குடிப்பாள் பார்வதி. அவளுக்குப் பிடித்தமானதையெல்லாம் ஞாபகமாய் வாங்கித் தருவார்.'எனக்கு இங்கிலீசு வரமாட்டேங்குப்பா...'ஒரு முறை பார்வதி அழுதுகொண்டே கூறினாள். படிச்சது போதும்டா...முடிஞ்சத எழுது. மண்டைல ஏறலன்னா வுடு கழுதய..பொட்டப்புள்ளதான...படிச்சு என்ன செய்யப்போற...வெள்ளக்காரன் போனாலும் தரித்திரம் பிடிச்ச பயலோட இங்கிலீசு இருக்கறவன் உசிற வாங்குது...' சாமிக்கண்ணு மகளைத் தேற்றினார். கடைசியில் இங்கிலீசே அவளுக்கு எமனாகி விட்டது. இங்கிலீசு பாடத்தில் பெயிலாகி தோல்வியைத் தாங்கிக்க முடியாமல் இப்படிப் பண்ணிட்டுப் போனாளே...!. மாலை வெயிலின் வெக்கை குறை;நது லேசான காற்று வீசிக்கொண்டிருக்கும் போது அந்த பச்சை மாருதி கார் தண்டவாளம் அருகே பாதையை விட்டுக் கீழிறங்கி ஒதுக்குப்புறமாய் நின்றது.காரிலிருந்து இறங்கிய சின்னப்பாப்பர்'தாத்தா! நாங்க புதுசா கார் வாங்கியிருக்கோம்! வந்து பாருங்க!. காலைலே இந்த வழியாத்தான் போனோம். நேரமாச்சுன்னு பேச முடியல....'

மூச்சுவிடாமல் சாமிக்கண்ணுவைப் பார்த்துப் பேசினாள். எதிர்பாராமல் சின்னப்பாப்பாவைப் பார்த்த வியப்பில் சாமிக்கண்ணு விரைவாக வந்து சேர்ந்தார்.'கார் ரொம்ப ஜோரா இருக்கே! புதுசா?'காரைச் சுற்றி வந்தார். டிரைவர் சீட்டில் கண்ணாடி அணிந்த நடுத்தர வயது இளைஞர் அமர்ந்திருந்தார். சாமிக்கண்ணுவைப் பார்த்து சிரிக்க முயன்றார். 'ஆமா!புதுசு...நேத்துதான் வாங்கினோம்.: என்றவள் முன்பக்கம் வந்து'அப்பா! நான் சொன்ன தாத்தா இவங்க தான்! ரொம்ப நல்லவரு. இனிமே உங்க காரைப் பார்த்தவுடனே கேட்டை மூடாம போகவிட்டுத் தான் அடைப்பாரு...என்ன தாத்தா?' என்றாள்.'ஆமா!ஆமா!...' என்ன தாத்தா?' என்றாள். 'ஆமா! ஆமா!... என்ற சாமிக்கண்ணு பதில் கூறினாலும் துணிப்பையில் உள்ள நுங்கு பார்சலை சின்னப்பாப்பாவிடம் தரவா வேண்டாமா என்ற சஞ்சலத்தில் இருந்தார்.'தாத்தா இந்தாங்க கேக்!'சின்னப்பாப்பா நீட்டிய கேக்கை பவ்யமாய் வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு குழந்தையின் சந்தோஷ மனநிலையைக் குலைக்கும் வகையில் எதையும் சொல்லி விட வேண்டாம் என்று தோணியது. 'நாளைக்குப் பார்ப்போம் தாத்தா!'வேகமாகக் காருக்குப் பின்புறம் வந்து கதவைத் திறந்து ஏறப்போன சின்னப் பாப்பாவின் மென்மையான கரங்களை தனது தடிப்பேறிப்போன கைகளில் பிடித்து அன்பாய் ஒரு முத்தம் கொடுத்து 'போய்ட்டு வாடா' என்று வழியனுப்பினார். கண்கள் கலங்கியபடி மாருதி கார் புள்ளியாய் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தார். கேபிள் அறைக்குப் போகும்போது;'என்ன நுங்குப் பார்சலை பாப்பாட்ட கொடுக்கலையா?' என்றார். பழனி.'பார்சல் பாப்பாக்கு இல்லப்பா! மாரிக்கனிக்கு...'என்றவர் இந்தா! இந்த கேக்கிலே கொஞ்சம் எடுத்துக்க..' என்று கேக்கில் பாதியை எடுத்துக் கொடுத்தார்.'எந்த மாரிக்கனி? கேக்கை வாயில் போட்டவாறே பழனி சாமிக்கண்ணுவிடம் கேட்டார்.'இதுவா? வீட்டுக்குப் பக்கத்தில மாரிக்கனின்னு ஒரு பொட்டப்புள்ள சொல்லலையோ..'

செய்துங்கநல்லூர் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிய நம்பரைப் பெற்றுக் கொண்டு வரவிருக்கும் ரயிலுக்கான சிக்னலைப் போட ஆரம்பித்தார். கடைசி முறையாய் சாமிக்கண்ணு.